போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்
சென்னை: போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை என கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று கருணாநிதியின் 96-ஆவது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதி மறைவுக்கு பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் விழா இதுவாகும்.

இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் மெரினாவில் உள்ள சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:கலைஞரின் 96-வது பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது என் மனதிலே தோன்றும் எண்ணம்: "போராட்டங்கள் எப்பொழுதும் ஓய்வதில்லை"
கலைஞரின் 96-வது பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது என் மனதிலே தோன்றும் எண்ணம்: "போராட்டங்கள் எப்பொழுதும் ஓய்வதில்லை"
— P. Chidambaram (@PChidambaram_IN) June 3, 2019
இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை. Eternal vigilance is the price of liberty
இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அது போல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கருணாநிதியின் பிறந்தநாள் குறித்து டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications