இது எங்க நிலம்.. அடியாட்களுடன் போய் தகராறு செய்த பா.ரஞ்சித் சகோதரர்.. கைமீறி கட்டப்பஞ்சாயத்து
சென்னை; சென்னை மணலி புது நகரில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு நிலப்பிரச்சனை ஒன்றிற்காக கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் பா. ரஞ்சித் சகோதரர் பிரபுதான் இந்த வழக்கில் சிக்கி இருப்பது. ரிஷி என்ற இளைஞர் சென்னை மணாலி புது நகரில் நிலம் ஒன்றை வாங்கி உள்ளார். 2007 ரேவதி என்பவரிடம் இருந்து நிலம் வாங்கினார். 3 பேர் பங்குதாரர்கள் கொண்ட நிலத்தில் 3 பேரிடமும் கையெழுத்து வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் ரேவதி உறவினர் ஷகீலா என்பவர் திடீரென அந்த நிலம் என்னுடையது என்று கூறி பிரச்சனை செய்துள்ளார். அந்த நிலம் எனக்கும் சொந்தம் என்று கூறி மோதல் செய்துள்ளார். இதையடுத்து ரிஷி பதிவுத்துறை அலுவலகத்தில் இது பற்றி புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் தொடர்பாக சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை ஒரு பக்கம் தீவிரமாக நடக்கும் நிலையில்தான்
மணலி புது நகரில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு இந்த நிலப்பிரச்சனைக்காக கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷகீலா பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபுவை பார்த்து உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு இருவரும் 20 ஆட்களுடன் சேர்ந்து சென்று ரிஷி இருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர். முதலில் சிசிடிவி கேமராவை உடைத்து உள்ளனர். அதன்பின் கற்களை வீசி பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு சரமாரியாக தாக்கி உள்ளார்.
ரிஷி புகார்: ரிஷி தங்கி இருக்கும் இடத்தில் சரமாரியாக தாக்கி கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நிலத்தை விட்டுவிடு ஓடி விடு.. இது எங்கள் நிலம் என்று ஷகீலா என்ற அந்த பெண்ணிற்காக கடுமையாக பேசி உள்ளார்.
ரிஷி உறவினர்கள் சிலர் இதில் கடுமையாக காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ரிஷி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆட்கள் கூட்டமாக வந்தனர். எங்கள் மீது சரமாரியாக தாக்கினர். நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கற்களை வீசி தாக்கினர். நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டாலும் துரத்தி அடித்தனர் என்று கூறி உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணலி புது நகரில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு நிலப்பிரச்சனை ஒன்றிற்காக இப்படி கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரிய விசாரணை செய்து கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணலி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications