Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம் பயன்படுத்தும் கேன் வாட்டரும் சுத்தம் கிடையாது? பாக்டீரியா கலப்படம்.. அதிர வைத்த இன்ஸ்டா ரீல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் வீட்டு பயன்பாட்டிற்காக கேன்களில் வாங்கி குடிக்கும் தண்ணீர்களில் கூட பாக்டீரியா கலப்படம் இருப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன. சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகையாக' வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் இனிமேல் கட்டாய ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.

இந்த நிலையில்தான் senti.bee என்ற இன்ஸ்டாகிராம் நெட்டிசன் ஒருவர் நாம் வீட்டு பயன்பாட்டிற்காக கேன்களில் வாங்கி குடிக்கும் தண்ணீர்களில் கூட பாக்டீரியா இருந்ததாக புகார் வைத்துள்ளார்

fssai ICMR

விழிப்புணர்வுக்காகவே இதை இடுகிறேன் நண்பர்களே! கடந்த சில நாட்களாக நான் தினமும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். இதையடுத்து நான் இரண்டு தண்ணீர் மாதிரிகளை பரிசோதித்தேன. ஒன்று எனது வீட்டு தண்ணீர். மற்றொன்று கடையில் வாங்கிய அக்வா தண்ணீர். நான் வழக்கமாக பயன்படுத்தும் வீட்டின் CAN தண்ணீரில் பாக்டீரியா மாசு இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்தது. என் குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் வாட்டர் கேன் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

பரமா.. நாம் குடிக்கும் தண்ணீர் அசுத்தமானது.. அது குடிப்பதற்கு ஏற்றதல்ல. நீங்கள் இந்த தண்ணீரை குடித்தால், உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை, அதனால் நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என்று அர்த்தமல்ல, உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ அல்லது குழந்தைகளுக்கோ எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படலாம். உங்களின் உடல் பிரச்சனைகளுக்கு இதுவே கூட காரணமாக இருக்கலாம், என்று எச்சரித்து உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு அடிக்கடி உடல்நலப்பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தண்ணீரில் செய்த சோதனையில் இதை கண்டுபிடித்துள்ளார்.

எச்சரிக்கை:

சமீபத்தில்தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகையாக' வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் இனிமேல் கட்டாய ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.

அதிக ஆபத்துள்ள உணவு வகைகளுக்கு கட்டாய ஆய்வு அவசியம்: புதிய விதியின் கீழ், அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களும் இனி வருடாந்திர ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். புகார்கள் மற்றும் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். .

உரிமம் அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பு இந்த ஆய்வுகள் நடைபெறும்.இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள வகையின் கீழ் வரும் தயாரிப்புகள் அனைத்திற்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இனி தண்ணீர் கேன்களுக்கு வருடா வருடம் இந்த சோதனை நடக்கும்.

3ம் பார்ட்டி நிறுவனங்களின் வருடாந்திர தணிக்கைகள்:

FSSAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட 3ம் பார்ட்டி உணவுப் பாதுகாப்பு நிறுவனங்களால் வருடாந்திர தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் பாதுகாப்பாக இருக்கிறதா? அதில் தவறு இருக்கிறதா? தண்ணீர் எப்படி பேக்கேஜ் செய்யப்பட்டு உள்ளது என்பதெல்லாம் இந்த சோதனையில் மேற்கொள்ளப்படும். இத்தனை காலம் ஒரு முறை FSSAI சான்று வாங்கினால் அந்த குடிநீர் நிறுவனம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்டப்படாது. இனி வருடம் ஒருமுறை பாட்டில் நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+