’பத்மபூஷன்’ கேப்டனுக்கு கவுரவம்..டெல்லியிலிருந்து இனிப்பான செய்தி! மே 9ல் பெற்றுக் கொள்ளும் பிரேமலதா
சென்னை: மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் விழாவில் அவர் பெயர் இடம் பெறாதது சர்ச்சையானது. இந்நிலையில் அவருக்கு எப்போது பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை அவரது மனைவியும் தேமுதிக செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை குறைபாட்டால் காலமானார்.

இதையடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கேப்டன் விஜயகாந்த்: இந்நிலையில் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற விழாவில் விஜயகாந்த் பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் அவர் பெயர் இல்லை. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
பத்ம பூஷன்: அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி அன்று நடைபெற்ற விழாவில் ஐந்து பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன, இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடும் கண்டனம்: ஆனால் விருது பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இது பலரிடையே கடும் கண்டனங்களை பெற்றது மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காததால் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவில்லையா என பலரும் கேள்வி எழுப்பினர். சமுக வலைதளங்களிலும் மத்திய அரசு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்த் க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவது குறித்த தகவலை தெரிவித்து இருக்கிறார் தேமுதிக பொது செயலாளரும், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த்.

விருது வழங்கும் தேதி: இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து மே ஒன்பதாம் தேதி நடைபெறும் விருது விழாவில் விஜயகாந்த் பத்மபூஷன் விருது வழங்கப்பட இருப்பதாகவும் அதற்கான அழைப்பு தங்களுக்கு வந்துள்ளதாகவும் கூறினார். மேலும் இருவர் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால் தானும் தனது மகன் விஜயபிரபாகரனும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றுக் கொள்வோம்" என கூறியிருக்கிறார். இந்த செய்தி விஜயகாந்த் ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ரசிகர் கொடுத்த சங்கீதா போட்டோ, பார்த்ததும் விஜய் செய்த செயல்.. இது விஜயகாந்துக்காக நடந்த மாற்றமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications