சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த தைரியத்தில்தான் செய்தேன்.. போலீஸிடம் "கக்கிய" ராஜகோபாலன்.. சூடு பிடித்த பத்மா சேஷாத்ரி விசாரணை!

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வரும் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் முக்கியமான விஷயங்களை விசாரணையின் போது தெரிவித்துள்ளார். தான் தொடர்ந்து பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டு வந்தது எப்படி என்று ராஜகோபாலன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் வகுப்பில் அரைநிர்வாணமாக வந்தது, மாணவிகளிடம் தவறாக பேசியது என்றது இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு

நீதிமன்ற காவலில் இருந்த ராஜகோபாலன் நேற்று முதல்நாள் 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். மே 4ம் தேதி மாலை வரை இவரை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ்

போலீஸ்

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பல முக்கிய விஷயங்களை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கக்கி இருக்கிறார். அதன்படி இவர் 20 வருடங்களுக்கு முன் பள்ளியில் சேர்ந்த போதே பாலியல் புகாருக்கு உள்ளாகி இருக்கிறாராம். அப்போதே பெண் ஆசிரியர்கள் சிலர் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். ஆனால் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விசாரணை

விசாரணை


கொஞ்சம் கொஞ்சமாக பள்ளியில் நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுத்த ராஜகோபாலன், பள்ளி தலைமைக்கும், அறங்காவலர் குழுவிற்கும் நெருக்கம் ஆகியுள்ளார். ராஜகோபாலன் பார்த்துக்கொள்வார் என்று பள்ளி நிர்வாகம் இவரிடம் நிறைய பொறுப்புகளை கொடுக்கும் அளவிற்கு பள்ளி தலைமைக்கு நெருக்கம் ஆகியுள்ளார். விளைவு இவருக்கு எதிராக பேசவே ஆசிரியர்களும், மாணவிகளும் பயந்து உள்ளனர்.

கொடுமை

கொடுமை

இதை பயன்படுத்திக்கொண்டுதான் ராஜகோபாலன் பாலியல் கொடுமைகளை செய்துள்ளார். மாணவிகளுக்கு வகுப்பிலும், பணக்கார சில மாணவிகளுக்கு ஸ்பெஷல் வகுப்பிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சரியாக படிக்காத மாணவிகளை தனியாக அழைத்து, பள்ளியிலேயே ஸ்பெஷல் டியூஷன் எடுப்பதாக கூறி அத்துமீறல்களை நிகழ்த்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Recommended Video

    Lawyer Ajitha விளக்கம்! பாலியல் குற்றவாளிகளுக்கான சட்டங்கள்
    பலர்

    பலர்

    பல மாணவிகள் புகார் கொடுக்காமல் அமைதி காத்த நிலையில், ஒரு சில மாணவிகள் சேர்ந்து சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ராஜகோபாலனுக்கு இருக்கும் தொடர்புகள் காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி தலைமையுடன் ராஜகோபாலன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதால் ராஜகோபாலுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

     நடவடிக்கை

    நடவடிக்கை

    புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்.. தைரியமாக பாலியல் அத்துமீறல்களை தொடர்ந்து நிகழ்த்தி வந்ததாக ராஜகோபாலன் போலீஸ் விசாரணையில் குறிப்பிட்டு உள்ளார். தன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், விஷயம் வெளியே போகாது என்ற நம்பிக்கையில்தான் இப்படி எல்லாம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

     வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இந்த வாக்குமூலம் காரணமாக பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை போலீஸ் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ராஜகோபாலனை மேலும் சில நாட்கள் காவலில் எடுத்து போலீஸ் விசாரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Padma Seshadri School Sexual Harassment: Rajagobalan gives an important statement in Police investigation yesterday after police took him in custody.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X