சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பவே அப்படி.. ஆசிரியைகளை கூட விட்டுவைக்காத ராஜகோபாலன்.. "ஷாக்" லெட்டர்.. பத்மா சேஷாத்திரி கொடுமை!

Google Oneindia Tamil News

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியைகள் சிலரிடமும் தவறாக நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து தோண்ட தோண்ட பல பூதங்கள் கிளம்பி வருகின்றன. மாணவிகளை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற காவலில் இருந்த ராஜகோபாலன் 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். போலீசார் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாழ்வாதாரத்திற்காக போராடும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்.. ஸ்டாலினுக்கு கமல் வைத்த கோரிக்கை வாழ்வாதாரத்திற்காக போராடும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்.. ஸ்டாலினுக்கு கமல் வைத்த கோரிக்கை

விசாரணை

விசாரணை

இவர் மீது மாணவிகள் பலர் புகார் வைத்துள்ள நிலையில் தற்போது தீவிரமான விசாரணைகள் நடந்து வருகின்றன. போலீசாரிடம் இவர் கொடுத்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பத்மா சேஷாத்திரி பள்ளியில் பல ஆசிரியர்கள் இப்படி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். தவறு செய்த மற்ற ஆசிரியர்களையும் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் ஈடுபட்டு வருகிறது,

பள்ளி ஆசிரியர்

பள்ளி ஆசிரியர்

இது ஒரு பக்கம் இருக்க பத்மா சேஷாத்திரி பள்ளியில் இருக்கும் சில ஆசிரியைகளிடமும் ராஜகோபாலன் தவறாக நடந்து இருக்கிறார். பள்ளியில் சேர்ந்த புதிதில் சில ஆசிரியர்களிடமும் இவர் தவறாக நடந்து இருக்கிறார். பாலியல் ரீதியாக பேசி உள்ளார். பாலியல் ரீதியாக அவர்களை சீண்டி உள்ளார்.

நிர்வாகம்

நிர்வாகம்

ஆசிரியைகள் அப்போதே பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரிடம் ஒரு மன்னிப்பு கடிதம் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றும் முடிவில் தமிழக போலீஸ் உள்ளது. இந்த ஹாக்கிங் கடிதம் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்கிறார்கள்.

ராஜகோபாலன்

ராஜகோபாலன்

அதேபோல் ராஜகோபாலன் மூலம் துன்புறுத்தலுக்கு ஆளான ஆசிரியைகளை தேடும் பணியும் நடந்து வருகின்றது. இவர்களை கண்டுபிடித்தால் போஸ்கோ இல்லாமல் கூடுதல் வழக்குகளையும் பதிய முடியும். அதோடு இவர்களுக்கு பின் இருப்பவர்களையும் கண்டுபிடிக்க முடியும் என்பதால் போலீஸ் விசாரணையில் துரிதம் காட்டி வருகிறது.

English summary
Padma Seshadri School Sexual Harassment: Rajagobalan harassed teachers also few years back says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X