சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டைட்டானிக் ஹீரோ டிகாப்ரியோ பதிவிட்டிருந்த பல்லாவரம் கிணறு நிறைஞ்சிடுச்சு.. மக்கள் ஹேப்பி

Google Oneindia Tamil News

Recommended Video

    டிகாப்ரியோ பதிவிட்டிருந்த பல்லாவரம் கிணறு இப்போ எப்படி இருக்கு தெரியுமா ?

    சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பதிவிட்டிருந்த பல்லாவரம் கிணறு தற்போது நீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை நகரம் கடந்த ஏப்ரல் மாதம் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாரவரம் கிணறு புகைப்படத்தை பதிவிட்டு, "மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும்" என பதிவிட்டு இருந்தார்.

    "மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும். நீர் அளித்து வந்த கிணறுகள் முற்றிலுமாக வறண்டிகிடக்கிறது. ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. இந்தியாவின் தெற்குகோடி நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் அங்கு பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

    எழுதிய காகிதத்தின் மதிப்பு கூட அவர் எழுத்துக்கு கிடையாது.. பாக். அமைச்சரை கலாய்த்த இந்தியாஎழுதிய காகிதத்தின் மதிப்பு கூட அவர் எழுத்துக்கு கிடையாது.. பாக். அமைச்சரை கலாய்த்த இந்தியா

    பல்லாவரம் ஈஸ்வரி நகர்

    பல்லாவரம் ஈஸ்வரி நகர்

    அவர் பதிவிட்டு இருந்த கிணறு பல்லாவரம் 6-வது வார்டு ஈஸ்வரி நகர் புதுகுடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது இந்தக் கிணறு. 1975 - ம் ஆண்டு ரயில்வே துறையினரால் தோண்டப்பட்டது.

    தண்ணீர் தாகம் தீர்த்தது

    தண்ணீர் தாகம் தீர்த்தது

    ரயில்வே காலத்தில் தோண்டப்பட்டதால் இதை ரயில்வே கிணறு என்று அந்த பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இந்த கிணறை ரயில்வே எப்போதோ அந்த பகுதி மககளுக்கே கொடுத்துவிட்டது. தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட ஏப்ரல் மே மாத காலக்கட்டத்தில் காலை 1 மணிநேரமும், மாலை 1 மணிநேரமும் வீட்டுக்கு 4 குடங்கள் தண்ணீர் வழங்கப்பட்டது. இந்த தண்ணீர் தூய்மையாக இருக்கும் என்பதால் இதை பிடிக்க நீண்ட வரிசையில் காலிக்குடங்களுடன் மக்கள் காத்திருந்து பிடித்து சென்றார்கள். இதைத்தான் டைட்டானிக் ஹீரோ நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஒரு செய்தி தளத்தில் வெளியான பதிவை வைத்து பதிவிட்டு இருந்தார்.

    சென்னையில் தென்மேற்கு பருவகாற்று

    சென்னையில் தென்மேற்கு பருவகாற்று

    ‘இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று சென்னை பக்கம் கொஞ்சம் நன்றாகவே வீசியதாலும், வெப்பச்சலனத்தாலும் நல்ல மழை பெய்தது இயல்பை விட கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் மழையின் அளவு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சென்னையில் அனைத்து பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்லாவரம் கிணற்றில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. அங்குள்ள மக்களுக்கு போதும் என்ற அளவுக்கு தண்ணீரை வழங்கி வருகிறது அந்த கிணறு.

    பல்லாவரம் மக்கள் நெகிழ்ச்சி

    ஹாலிவுட் நடிகர் டிகார்பியோவின் பதிவும், அதனை தொடர்ந்த மக்களின் வேண்டுதல்களும் பலித்து கிணற்றில் தண்ணீர் நிறைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

    English summary
    pallavaram well now full level after titanic hero dicaprio viral post of pallavaram well for chennai water crisis
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X