இளம் பெண் சுபஸ்ரீக்கு இறுதி அஞ்சலி.. கண்ணீரில் மிதந்த குரோம்பேட்டை.. ஏராளமானோர் பங்கேற்பு
Recommended Video
சென்னை: பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீயின் உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (22). இவர் கந்தன்சாவடியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் வேலை முடித்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மகன் திருமண பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
அப்போது கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி சுபஸ்ரீ மற்றும் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. லாரியின் முன்பக்கத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உடல் மற்றும் தலையின் மீது ஏறிய பிறகுதான் லாரி நின்றது. . இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த விபத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் ஆக்ரோசமாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். உயர்நீதிமன்றமும் பேனர் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்துள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக, பாமக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில் பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீயின் உடல் குரோம்பேட்டை பவானி நகரில் உள்ள இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவருக்கு அங்கு ஏராளமானனோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால் குரோம்பேட்டை கண்ணீர் மிந்தது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். தனது ஒரே செல்லமகளான சுபஸ்ரீயை இழந்து அவரது தந்தை ரவியும் தாயும் தவித்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications