பான் கார்டு விதிகள் கடுமையாகுது.. ஏப்ரல் 1-க்கு முன்பே இதை பண்னிடுங்க! புதிதாக அப்ளை பண்ண போறீங்களா?
சென்னை: பான் கார்டு விண்ணப்ப நடைமுறைகளில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மிக முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. தற்போது வரை ஆதார் கார்டு விவரங்களை மட்டுமே வைத்து பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், இந்த விதிமுறை வரும் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பான் கார்டு என்பது நிதி பரிவர்த்தனைக்கான முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. 10 இலக்கம் கொண்ட பான் கார்டு, வங்கிகளில் பெரிய அளவிலான பண பரிமாற்றம், சொத்து பதிவு உள்ளிட்டைவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பான் கார்டு விண்ணப்ப நடைமுறைகளில் மிக முக்கிய மாற்றத்தை வருமான வரித்துறை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்
இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதாவது, தற்போது வரை பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டும் போதுமானது. ஆதார் விவரங்களை கொடுத்து பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் பான் எண் ஒதுக்கப்பட்டு விடும். ஓரிரு நாட்களில் வீட்டிற்கு பான் அடையாள அட்டையும் கூரியர் ஆகிவிடும்.
ஆனால் வரும் 1 ஆம் தேதி முதல் ஆதார் கார்டு மட்டுமே வைத்து விண்ணப்பிக்க முடியாது. புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டுடன் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக பிறந்த தேதிக்கு ஆதார் கார்டுடன் கூடுதல் சான்றுகள் சமர்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
புதிய படிவங்கள் அறிமுகம்
பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பத்தாம் வகுப்பு கல்வி சான்றிதழ், பிரமாணப்பத்திரம் மற்றும் பிற அரசு ஆவணங்கள் ஆகிய ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கு சான்றாக சமர்பிக்க வேண்டும். அதேபோல, பான் கார்டு விண்ணப்பம் செய்வதற்கு பழைய விண்ணப்ப படிவங்களும் மார்ச் 31 ஆம் தேதி வரையே செல்லுபடியாகும்.
ஏப்ரல் 1, 2026 க்கு பிறகு புதிய படிவங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மற்றொரு முக்கியமான அப்டேட் என்னவென்றால், வரும் ஏப்ரல் முதல் பான் கார்டில் உள்ள பெயர் ஆதாரில் உள்ள விவரங்களுடன் அப்படியே பொருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு விண்ணப்பத்தில் வரவிருக்கும் இந்த நடைமுறை பற்றி மத்திய அரசின் 'பொதுச் சேவை மையங்கள்' (Common Services Centres) தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்த பொதுச்சேவை மையம் செயல்படுகிறது. எனவே பான் கார்டு விண்ணப்பிக்க திட்டமிட்டு இருப்பவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தால் கூடுதல் ஆவணங்கள் இன்றி ஆதார் கார்டு மட்டுமே வைத்து விண்ணப்பித்துக்கொள்ள முடியும்.
புதிய பான் கார்டுக்கு ஆன்லைன் வழியாகவும் எளிதாக விண்ணப்பிக்க முடியும். வருமான வரித்துறையின் NSDL இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். NSDL வெப்சைட்டில் உள்ள 'Apply Online' என்பதில் 'New PAN - Indian Citizen (Form 49A)' என்பதை தேர்வு செய்து, தனிப்பட்ட விவரங்களை (பெயர், பிறந்த தேதி, மொபைல் எண்) உள்ளிட்டவற்றை வழங்கி விண்ணப்பிக்க முடியும்.
-
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!














Click it and Unblock the Notifications