Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பட ரிலீசுக்கு கை கட்டி நின்ற பனையூர் பண்ணையாரே!' விஜய்யை ரவுண்டு கட்டும் அதிமுக! வெரி ராங்க் ப்ரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை ஒரு காட்டு காட்டியிருந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அக்கட்சி, தற்போது விஜய்யை 'பனையூர் பண்ணையார்' என குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறது.

வழக்கமாக அதிமுக பக்கம் விஜய் வண்டியையும் சரி, தனது வாயையும் சரி திருப்பியது கிடையாது. ஆனால், தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Panaiyur Landlord Vijay TVK AIADMK

என்ன பேசினார் விஜய்?

மாமல்லபுரத்தில் பேசிய விஜய், "தீய சக்தியாக இருக்கட்டும்.. ஊழல் சத்தியாகட்டும்.. இரண்டுமே தமிழ்நாட்டை ஆளக்கூடாது. அப்படிப்பட்ட கட்சிகளை உண்மையாகவே எதிர்க்கிற தைரியம், நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் எந்த சூழ்ச்சி செய்தாலும், எந்த அழுத்தம் கொடுத்தாலும்.. பணிந்து போக, அடிமையாய் இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை.

அதிமுகவை விமர்சித்த விஜய்

என் மண்ணுக்கும், மக்களுக்கும் யார் தீமை செய்தாலும்.. அதை எதிர்த்து அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். மக்களிடம் செல் என, அறிஞர் அண்ணா சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொண்டு.. நம்முடைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஏனெனில் இப்போது அரசியலில் இருக்கிறவர்கள், அண்ணாவை மறந்து விட்டார்கள்.

அண்ணா தொடக்கி வைத்த கட்சியும், அண்ணாவையும் மறந்து சுயநலமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. அண்ணா பெயரில் இருக்கும் கட்சியும் அவரை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நாம் அவரை மறந்து விடக்கூடாது" என்று பேசியிருந்தார்.

விஜய் இப்படி பேசுவார் என்று கொஞ்சமும் யோசிக்காத அதிமுக, தற்போது விஜய் குறித்து சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருக்கிறது.

பனையூர் பண்ணையார்

"பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நீங்கள்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.

அஇஅதிமுக என்னும் பேரியக்கம்

'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு...!

கைகட்டி காத்திருந்த விஜய்

தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து, வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..? ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!

பக்கத்தில் செங்கோட்டையன்

அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?

வேற லெவல் பண்ணையார்தனம்

நீங்கள் செய்தீர்களோ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே! அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை...!

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற லெவல் பண்ணையார்தனம்...! இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்...!

ஆபத்தான அரசியலின் அடையாளம்

கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம். அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan'sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ....!

நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..! அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக. DOT" என்று விமர்சித்திருக்கிறது.

இதை சற்றும் எதிர்பார்க்காத தவெகவினர், இட்ஸ் வெரி ராங் ப்ரோ என்று, அதிமுகவுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+