பரந்தூர் விமான நிலையம்.. 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.. டி.ஆர்.பாலு கொடுத்த அப்டேட்!
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக இதுவரை 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார். தனியார் வசம் உள்ள 2,400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறிய டிஆர் பாலு, சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுற்றி உள்ள கையகப்படுத்தப்படாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மீனம்பாக்கத்தில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவர் டிஆர் பாலு, விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர், எம்எல்ஏ-க்கள் ராஜா, கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பயணிகள் போக்குவரத்து, சரக்குகள் கையாள்வது குறித்தும், தர மேம்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன்பின் விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவர் டிஆர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகரப் பேருந்துகள் விமான நிலையம் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதி வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
விரைவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வரவுள்ளது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழக்கி இருக்கிறது. அந்த விமான நிலையம் வந்தால், சென்னையில் வாகன நெரிசல் தவிர்க்கப்படும்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மொத்தமாக 5,700 ஏக்கர் நிலையம் தேவையாக உள்ளது. அதில் தமிழக அரசுக்கு சொந்தமாக 2 ஆயிரம் ஏக்கர் உள்ளது. தனியார் வசம் 3,700 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இருந்து இதுவரை 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஆயிரம் ஏக்கர் வரை கையகப்படுத்தப்பட்டிருந்த சூழலில், ஒரு மாதத்தில் 300 ஏக்கர் கூடுதாக பெறப்பட்டுள்ளது.
இதனால் மீதமுள்ள 2,400 ஏக்கர் நிலத்தை வாங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னரே, அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்படும். அதேபோல் சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அருகில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பாடாது. மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தோம். இனி தமிழில் முறையாக அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications