தேய் பிறையில் மாணவர் சேர்க்கை.. நிறைந்த அமாவாசையில் டாஸ்மாக் கடை திறப்பு.. வருந்தும் பெற்றோர்
சென்னை: தேய்பிறையான நேரத்தில் மாணவர் சேர்க்கையை நடத்திவிட்டு நிறைந்த அமாவாசையில் டாஸ்மாக் கடைகள் திறப்பை அறிவித்தது தொடர்பாக தமிழக அரசு மீது பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.
எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து வாங்குவது பெரும்பாலானவர்களின் பழக்கமாகும். எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மங்களகரமான நாள், மங்களகரமான நேரம் என பார்த்து பார்த்து தங்கள் செயல்களை செய்வர்.
பெரும்பாலும் திருமணங்கள், காதுகுத்து, சீமந்தம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா, வீடு குடித்தனம் போதல் உள்ளிட்டவை வளர்பிறை காலத்தில் அதாவது அமாவாசை பிறப்பிற்கு பிறகு போனால் நிலவை போல் நம் வாழ்வும் வளர்ச்சி அடையும் என்பது ஐதீகம்.

வேலைக்கு விண்ணப்பித்தல்
அது போல் நல்ல காரியங்கள் வேலைக்கு விண்ணப்பித்தல், புதிதாக தொழில் தொடங்க வங்கி கடனுக்கு விண்ணப்பித்தல், திருமண பதிவு செய்தல், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் மற்றும் கட்டணம் செலுத்துல் என எந்த புதிய செயலாக இருந்தாலும் அமாவாசை நாளில் தொடங்க மக்கள் விரும்புவதுண்டு.

தமிழகம்
கடந்த 5 மாதங்களாக கொரோனா லாக்டவுனால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் அரசு கூறிய ஆவணங்களுடன் பள்ளிகளுக்கு வந்து மாணவர் சேர்க்கையை நடத்தினர்.

டாஸ்மாக் கடைகள்
நேற்று தேய் பிறை நாளில் புதிதாக மாணவர் சேர்க்கை நடத்தியது குறித்து பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று நிறைந்த அமாவாசை நாளில் டாஸ்மாக் கடைகள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றப்பட்டு திறக்கப்பட்டன. தேய் பிறை நேரத்தில் பள்ளிச் சேர்க்கையை தொடங்கிவிட்டு அமாவாசை நாளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதில் என்ன அவசியம் இருக்கிறது என பெற்றோர் கேள்வி எழுப்புகிறார்கள்.
Recommended Video

வருமானம்
மாணவர்களின் வருங்காலத்தை விட டாஸ்மாக் வருமானம்தான் தமிழக அரசுக்கு பெரிதாகிவிட்டதா என கேள்வி எழுப்பினர். மேலும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகள் திறக்கும் நேரத்தில் அமாவாசை நெருங்கினால் அன்றைய தினமே பல தனியார் பள்ளிகள் வகுப்புகளை தொடங்கும் நிலையில் அரசோ தேய் பிறை நாளில் புத்தம் புதிய வகுப்புகளுக்கான சேர்க்கையை நடத்தியுள்ளதை எண்ணி பெற்றோர் வேதனை தெரிவிக்கிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications