விறு விறு.. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்.. கணக்கெடுப்பு தீவிரம்
சென்னை: வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாத கால கட்டத்தில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்க ஆரம்பித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள்வது குறித்த ஆலோசனைகளும் கூட்டங்களும் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பும் என அரசியல்கட்சிகள் பரபரக்க தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையமும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க ஆரம்பித்துள்ளது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாகவும், வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி கூறியதாவது:- நாடாளுமன்ற பொதுத்தேர்தல அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 135 % இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அதாவது ஒரு தொகுதியில் 200 வாக்குச்சாவடி உள்ளது என்றால் 270 வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்போம். இதற்கான கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த பணி ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும். அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.

கூடுதலாக தேவைப்படும் இயந்திரங்கள், பழுதான இயந்திரங்களுக்கு மாற்று இயந்திரங்கள் வழங்குவது பற்றி தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அடுத்தடுத்த கட்டங்களாக நடக்கும்" என்றார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications