சென்னையில் இருந்து டெல்லி கிளம்ப இருந்த விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. பயணிகள் தவிப்பு!
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், புறப்பட தாமதமாகியுள்ளது. 164 பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலையில் புறப்பட இருந்தது ஏர் இந்தியா விமானம். 164 பயணிகள் இந்த விமானத்தில் பயணிக்க இருந்தனர். இந்நிலையில், திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் புறப்படத் தாமதமாகியுள்ளது.

இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக 164 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். விமானம் தாமதம் குறித்து விமான நிறுவனம் உரிய காரணத்தைக் கூறாததால், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க எங்கள் குழு முயற்சி செய்து வருகிறது. இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்ட பின்பு விமானம் புறப்படும், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் குழுவினர் சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மாற்று விமானத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications