பட்டா ஆவணமும் முக்கியம்.. கிரயம் முடிக்கும்போது இதை கவனியுங்க.. கிரையம் பத்திரத்தில் ஆவண எழுத்தர்கள்
சென்னை: கிரைய பத்திரம் என்றால் என்ன? கிரையம் செய்ய தயாராகும்முன்பு, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கிரையப் பத்திரத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டிய அம்சங்கள் என்னென்ன? வில்லங்கம் எதிலும் சிக்காமல், கிரையம் தயார் செய்வது எப்படி? கிரைய பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுத்தர்களை தேர்வு செய்வது எப்படி? இவைகள் குறித்து சார் பதிவாளர்கள் அறிவுறுத்துவது என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
குறிப்பிட்ட ஒரு நிலத்தை, ஒருவரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, அதை உங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள தயார் செய்யப்படும் ஆவணம் தான் கிரைய பத்திரம் என்பார்கள்.. சம்பந்தப்பட்ட நிலம் குறித்த விவரங்களை, முத்திரை தாள்களில் விரிவாக எழுதி, சார் பதிவாளர் அலுவலகத்தில், சாட்சிகள் முன்னிலையில் ரிஜிஸ்டர் செய்து கொள்வது கிரையப்பத்திரம்.

கிரையப் பத்திரம் அவசியம்
ஆனால், கிரையப்பத்திரம் எழுதுவது எளிதானது இல்லை. சில முக்கியமான அம்சங்களை கருத்தில் கொண்டு எழுதவேண்டும்.. குறிப்பாக, கிரயம் எழுதி தருபவர்களுக்கு யார் மூலம் சொத்து வந்தது? அவருக்கு முன்பு கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து கிடைத்தது? போன்ற விவரங்களை பத்திரத்தில் எழுத வேண்டும்.
நிலத்தை எழுதி கொடுப்பவரின் பெயர், இன்ஷியல் இரண்டையும் சரியாக பதிவிட வேண்டும்.. அத்துடன் அவரின் அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, முன் பத்திரம் போன்றவைகளில் இருப்பதை போலவே, பத்திரத்திலும் எழுதப்பட்டுள்ளதா? என்பதையும் ஒப்பிட வேண்டும்..
கிரையம் எழுதும்போது முக்கியம்
நிலத்தை எழுதி தருபவர் மட்டுமல்லாமல், கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர், இன்ஷியல், முகவரி, சான்றுகளை சரியாக எழுத வேண்டும்.. ஒவ்வொன்றும், தங்களின் அடையாள அட்டையுடன் ஒத்துப்போகும்படி இருக்கிறதா? என்பதை ஒப்பிட்டு, பிழையில்லாமல் எழுத வேண்டும்.
அதேபோல இரு தரப்பிலுமே, வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் என்று தனித்தனியாக எழுதுவது நல்லது.. ஒருவேளை ஒரே மாவட்டத்தின் பெயராக இருந்தாலும் , வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் என்பதை தனித்தனியாக பிரித்து எழுதலாம்.
பட்டா எண், பட்டா படி உட்பிரிவு
முத்திரை வரியை செலுத்தியிருப்பதுடன், முத்திரைத் தாள், வரைவோலை அல்லது இ-ஸ்டாம்பிங் முறை மூலம் முத்திரை வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்..
பட்டா எண், பட்டா படி உட்பிரிவு புதிய சர்வே எண்ணை எழுதவேண்டும். கூட்டுப்பட்டாவில் சொத்து இருக்கும்பட்சத்தில், அதன் சர்வே நம்பரையும் நீளம், அகம் வாரியாக குறிப்பிடலாம்.. தெரு, கதவு எண், கட்டிடம், கிணறு, பொது வழி, பொதுச் சுவர், பொது தண்ணீர் உரிமை போன்றவற்றை மறக்காமல் எழுத வேண்டும்... மெட்ரிக் அளவுகோளில் எழுதியிருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் ..
முத்திரைத்தாள்கள்
பத்திரத்தின் அனைத்து பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர், எழுதி தருபவர் என 2 தரப்புகளின் கையொப்பமும் இருக்க வேண்டும். அத்துடன் 2 தரப்பு சாட்சிகளின் கையெழுத்தும் , அவர்களது முகவரியுடன் இருக்கிறதா? முத்திரைத்தாள்கள் சரியாக உள்ளதா? வங்கியிலிருந்து டிடி சரியாக எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கடைசியாக, பட்டா நகல், அதன் நில வரைபடம் இணைப்பதுடன், நகல் ஆவணம் அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கையால் எழுதப்பட நேர்ந்தால், நிலத்தை விற்பவர், வாங்குபவரின் பெயர், கிரயத்தொகை, சொத்து விபரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
எழுத்தர்கள் தேர்வு கட்டாயம்
எப்போதுமே பத்திரத்தில் அதிக தகவல்களை சேர்த்தால், பதிவின்போது தேவையில்லாத கேள்விகள் எழலாம்.. இதனால் பத்திரப்பதிவு பணிகள் தாமதமாகவும் வாய்ப்புள்ளது. எனவே, பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுத்தர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதாக உள்ளது.
வழக்கறிஞர் பத்திரத்தை படித்து அதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரி பார்த்து ஆலோசனை வழங்கலாம்... ஆனால், அவரே ஆவண எழுத்தராகவும் செயல்படும்போது நடைமுறையில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாகவும், எனவே, ரய பத்திரம் தயாரிக்க அனுபவம் வாய்ந்த, உரிமத்துடன் செயல்படும் ஆவண எழுத்தர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் சார்-பதிவாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications