நல்லா வருவீங்க! அரை லிட்டர் பெட்ரோலுக்காக நகையை அடகு வைக்கணுமா? தீயாய் பரவும் விளம்பர போஸ்டர்
சென்னை: வியாபாரத்தில்தான் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்ன்னா வட்டிக்கடை நடத்துவோரும் இந்த யுத்தியை கையாள்கிறார்கள்.
மளிகைக்கடை, துணிக்கடை, ஸ்வீட் கடை உள்ளிட்டவைகளில் வியாபாரத்தை பெருக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இத்தனை சதவீதம் டிஸ்கவுண்ட், இத்தனை ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் இந்த பொருள்கள் எல்லாம் இலவசம். தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம்.

இப்படி வாடிக்கையாளர்களை கவர விதவிதமான அறிவிப்புகளை பார்த்திருப்போம். இப்போது வட்டிக் கடைக்காரர்கள் கூட வாடிக்கையாளர்களை கவர இலவசங்களை அறிவித்துள்ளார்கள். இது குறித்து விளம்பரம் வைரலாகி வருகிறது.
கும்மிடிப்பூண்டியில் தனியார் அடகு கடை ஒன்றுதான் இது போன்ற வியாபாரத்தை அதிகரிக்கும் உத்தியை கையாண்டுள்ளது. ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை நகை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணெ் இலவசம். ரூ 30 ஆயிரம் வரை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணெய்யுடன் அரை லிட்டர் பெட்ரோலும் இலவசம்.
ரூ 40 ஆயிரம் வரை அடகு வைத்தால் கூடுதலாக 5 கிராம் வெள்ளி இலவசம். ரூ 40 ஆயிரத்திற்கு மேல் அடகு வைத்தால் தலா ஒரு லிட்டர் பெட்ரோல், சமையல் எண்ணெயுடன் 10 கிராம் வெள்ளி நகை கிடைக்கும். கும்மிடிப்பூண்டியில் இது போன்றதொரு அறிவிப்பை பார்க்கும் மக்கள் நகையை வாங்கத்தான் இப்படி விளம்பரம் கொடுக்கிறார்கள். இவர்கள் என்ன நகையை விற்க கொடுத்துள்ளார்களே என்கிறார்களாம்.
ஒரு சில நகை அடகு கடைகளில் நகையை அடகு வைத்தால் தீபாவளி கிப்ட்டாக பாத்திரங்களை கொடுக்கும் வழக்கமும் இருக்கிறது. இதெல்லாம் விளம்பர யுத்தி என்றாலும் கடன் வாங்காமல் இருப்பதை வைத்து குடும்பம் நடத்தத்தான் பெரியவர்கள் புத்தி சொல்வார்கள். ஆனால் இவர்களோ இவர்களுக்கு வட்டி கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு செய்வது கொள்ளையடிப்பதற்கு சமம் என பலர் விமர்சிக்கிறார்கள்.
இந்த இலவசங்களை விட இரட்டிப்பு மடங்கு அவர்கள் வட்டி மூலம் சம்பாதித்துவிடுவார்கள் என்பதை கூட அறியாமல் இவர்களிடம் எத்தனை பேர் நகைகளை வைத்து கடனாளியாக போகிறார்களோ என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications