பிரபாகரன் உயிரோடு இருக்கும் செய்தியை அறிவித்தது ஏன்? பழ.நெடுமாறன் நீண்ட விளக்கம்
பிரபாகரன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்பதை விவரித்துள்ளார் பழ.நெடுமாறன்.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு அறிவிக்கும் செய்தியை அறிவித்ததன் பின்னணியை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விவரித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் மெய்ப் பொருள் நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் கூறியதாவது: ஒரு பெரிய போர்க்களத்தில் இருப்பவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் அவர் தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்பதுதான் பொருள். எந்த மார்க்கமாக போனார்? எப்படி போனார்? இப்போது எங்கு இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எழுப்புவது நியாயம். அதற்குரிய பதிலை பிரபாகரன் சொல்ல வேண்டும் அல்லது அவருடன் இருந்த மூத்த தளபதிகள் சொல்ல வேண்டும். அவர்களைத் தவிர அந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் வெளிவந்த பிற்பாடு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள்.

பொதுவெளியில் தோன்றுவதை விடுதலைப் புலிகளின் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். எப்போது தோன்ற வேண்டும்? அதனை எப்போது சொல்ல வேண்டும்? என்பதை அவர் தான் முடிவு செய்ய முடியும். நானோ? நீங்களோ? வேறு ஒருவரோ முடிவு செய்ய முடியாது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக் கட்டப் போர் முடிந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்தார்கள். அவர் உடல் என்று சொல்லி ஏதோ ஒரு உடலை எல்லாம் காட்டினார்கள். ஆனால் அப்போது இருந்து சர்வதேச சூழ்நிலை வேறு. இப்போது இருக்கும் சர்வதேச சூழ்நிலை முற்றிலும் மாறி இருக்கிறது.
ஒன்று, இலங்கையில் உள்நாட்டிலும் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ராஜபக்சர்களை வெற்றி வீரர்கள் என்று கொண்டாடி எவ்வாறு ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தார்களோ அதே போல சிங்கள மக்கள் ராஜபக்சர்களை பதவியிலிருந்து விரட்டி அடித்திருக்கிறார்கள். இன்னமும் அவர்களுக்கு எதிரான போராட்டம் மக்களால் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வு அந்த மக்களுக்கு ஏற்பட்டதன் விளைவு தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.

2009 இற்கு முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்த போது உலக நாடுகளுக்கு எல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையை சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கம் என்பதை மறைத்து பயங்கரவாத இயக்கம் என்று சித்தரித்தார்கள். அப்போதைய இந்திய அரசும் அதற்கு ஒத்துழைத்தது.
இலங்கையில் தடை விதித்தார்கள் என்றால், இந்தியாவில் அதற்கு முன்னதாகவே தடை விதித்தார்கள். இதன் விளைவாக உலக நாடுகள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக 2009இல் இடம்பெற்ற போரின் போது 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் சிங்கள அரசுக்கு தேவையான இராணுவ உதவிகளை, நிதி உதவிகளை செய்தன. விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான உதவிகளை வழங்கினார்கள். ஆனால், 13 ஆண்டுகளுக்கு பின்னர் நிலைமை இன்று முற்றிலும் மாறிவிட்டது.

இப்போது இருக்கின்ற பிரச்சினை ஈழத் தமிழர் பிரச்சினை என்பதை விட இந்தியாவுக்கு அபாயகரமான பிரச்சினை உருவாகிவிட்டது. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்று நிற்பதனால் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரமல்ல. இந்தியாவுக்கு பேரபாயம் தென்பகுதியில் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது. வடக்கிலும் சீனாவால் தொந்தரவு இருக்கிறது. தெற்கிலும் சீனாவால் தொந்தரவு ஏற்படுமானால் அதன் விளைவு என்னவாகும். ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வேறு சீனாவினால் இந்தியாவுக்கு வந்திருக்கின்ற அபாயம் வேறு என்று பார்க்கக் கூடாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த பிரச்சினைகள் என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு வரும் அபாயங்களை தடுக்க முடியும். ஈழப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.
அந்தக் கோணத்தில் பார்க்க வேண்டிய கட்டம் தற்போது வந்திருப்பதால் தான் தேசிய தலைவர் பிரபாகரன் இருக்கும் செய்தியை அறிவிக்க வேண்டி வந்தது. பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால் பல்வேறு தொடர்விளைவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன அதற்கு எல்லாம் பார்க்க வேண்டும். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நன்றி: ஐபிசி தமிழ்
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications