தமிழக மக்கள் பரிசுபெட்டக சின்னத்தில் வாக்களித்து பெரிய புரட்சி செய்ய போகிறார்கள்- டிடிவி நம்பிக்கை
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் காலை முதலே தங்களத வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தமிழக மக்கள் தலைநிமிர வேண்டும், தங்களது வாழ்வு செழிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஆட்சி மாற்றத்துக்காக ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார். ஏனெனில் தமிழ்நாட்டின் உரிமைகள் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆட்சியும், மோடியினுடைய ஆட்சி தான் என்பதால் மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளதாக குறிப்பிட்டார். எனவே தமிழகம் புதிய மாற்றம் காண வேண்டும் என்பதற்காக தமிழக இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், தாய்மார்கள் பரிசு பெட்டக சின்னத்தில் அமமுக-விற்கு வாக்களித்து பெரிய புரட்சியை ஏற்படுத்த போகிறார்கள் என்றார்.
வாக்காளர்களுக்கு பணவிநியோகத்தில் ஈடுபட்டது முழுக்க முழுக்க அதிமுகவினர் தான் என்றார். வாக்குகளுக்காக நாங்கள் பணம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என வினவினார். மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் எதிர்தரப்பினர் அச்சத்தில் ரூ2,000 வரை வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications