தமிழக மக்கள் பரிசுபெட்டக சின்னத்தில் வாக்களித்து பெரிய புரட்சி செய்ய போகிறார்கள்- டிடிவி நம்பிக்கை
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் காலை முதலே தங்களத வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தமிழக மக்கள் தலைநிமிர வேண்டும், தங்களது வாழ்வு செழிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஆட்சி மாற்றத்துக்காக ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார். ஏனெனில் தமிழ்நாட்டின் உரிமைகள் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆட்சியும், மோடியினுடைய ஆட்சி தான் என்பதால் மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளதாக குறிப்பிட்டார். எனவே தமிழகம் புதிய மாற்றம் காண வேண்டும் என்பதற்காக தமிழக இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், தாய்மார்கள் பரிசு பெட்டக சின்னத்தில் அமமுக-விற்கு வாக்களித்து பெரிய புரட்சியை ஏற்படுத்த போகிறார்கள் என்றார்.
வாக்காளர்களுக்கு பணவிநியோகத்தில் ஈடுபட்டது முழுக்க முழுக்க அதிமுகவினர் தான் என்றார். வாக்குகளுக்காக நாங்கள் பணம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என வினவினார். மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் எதிர்தரப்பினர் அச்சத்தில் ரூ2,000 வரை வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications