சின்ராசு தூக்குவாளியை எடுத்துட்டு கறி வாங்க கிளம்பிட்டான்.. வீடு தோறும் ஒரு மாற்றம்!
Recommended Video

சென்னை: பிளாஸ்டிக்கை ஒழிக்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள்.. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சொல்லிக் கொள்ளும்படியாக. இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில் மக்களிடமும் மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.
மக்களிடம் வரவேற்பு இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும் கூட மாறித்தான் பார்ப்போமே என்ற எண்ணம் மக்களுக்கு வரத் தொடங்கியுள்ளது நல்ல அறிகுறிதான். அந்த வகையில் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள் வியாபாரத் தலங்களில் அடியோடு குறைந்துள்ளன.
துணிப் பைகளுக்கும், பிற பாத்திரங்களுக்கும் மக்கள் மாற ஆரம்பித்துள்ளனர். கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை இன்று முதல் தருவதில்லை. மாறாக சன்னமான துணிப் பைகளில்தான் பொருட்கள் தரப்படுகின்றன.

இறைச்சிக் கடைகளில் மாற்றம்
சாதாரண பொருட்களை வாங்க துணிப் பைகள் சரிப்பட்டு வரும். அதேசமயம், இறைச்சிக் கடைகளில் அதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. காரணம், இறைச்சியை துணிப் பையில் போட்டு வாங்கிச் செல்லும்போது அதிலிருந்து ரத்தம் சொட்டி ஏதோ தலையை வெட்டி எடுத்துச் செல்வது போன்ற பிரமை ஏற்படுகிறது.

எவர்சில்வர் பாத்திரம்
அந்தக் காலத்தில் தூக்கு வாளி எனப்படும் எவர்சில்வர் பாத்திரம், அலுமினியப் பாத்திரங்களில்தான் கறிக்கடைக்குச் செல்வது வழக்கம். அதிலும் மீன் என்றால் பேப்பரிலேயே வெட்டி எடுத்து கொண்டு வந்து விடலாம். இந்த பழைய முறைக்கு தற்போது மக்கள் மாற ஆரம்பித்துள்ளனர்.

துணிப் பையும் இருக்கு பாஸ்
அதேசமயம், கறிக் கடைகளில் துணிப் பைகளையும் வைத்துள்ளனர். ஆனால் அதற்கு தனியாக பைசா தர வேண்டும். எனவே பாத்திரமாக எடுத்துச் செல்வது பெஸ்ட் என்பது கறிக் கடைக்காரர்களின் அறிவுரையாகும். மக்களும் இப்போது பாத்திரத்துடன் கறி வாங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் நல்ல மாற்றம்தான்.

ஆரோக்கியம் காப்போமே
பிளாஸ்டிக் உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு. இன்று பாத்ரூம் டப் முதல் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களிலும் பிளாஸ்டிக் ஊடுறுவி விட்டது. அதை மொத்தமாக அகற்றுவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லைதான். இருப்பினும் சின்ன சின்னதாக மாற ஆரம்பித்தால் நிச்சயம் பிளாஸ்டிக் இல்லாத உலகை படைக்க முடியும். பழையது எப்போதுமே சுவாரஸ்யமானது, சுகமானது.. பழைய காலத்திற்கு மாறித்தான் பார்ப்போமே.. நமது நல்லதுக்காக.. பூமியின் ஆரோக்கியத்திற்காக.
-
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications