சின்ராசு தூக்குவாளியை எடுத்துட்டு கறி வாங்க கிளம்பிட்டான்.. வீடு தோறும் ஒரு மாற்றம்!
Recommended Video

சென்னை: பிளாஸ்டிக்கை ஒழிக்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள்.. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சொல்லிக் கொள்ளும்படியாக. இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில் மக்களிடமும் மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.
மக்களிடம் வரவேற்பு இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும் கூட மாறித்தான் பார்ப்போமே என்ற எண்ணம் மக்களுக்கு வரத் தொடங்கியுள்ளது நல்ல அறிகுறிதான். அந்த வகையில் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள் வியாபாரத் தலங்களில் அடியோடு குறைந்துள்ளன.
துணிப் பைகளுக்கும், பிற பாத்திரங்களுக்கும் மக்கள் மாற ஆரம்பித்துள்ளனர். கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை இன்று முதல் தருவதில்லை. மாறாக சன்னமான துணிப் பைகளில்தான் பொருட்கள் தரப்படுகின்றன.

இறைச்சிக் கடைகளில் மாற்றம்
சாதாரண பொருட்களை வாங்க துணிப் பைகள் சரிப்பட்டு வரும். அதேசமயம், இறைச்சிக் கடைகளில் அதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. காரணம், இறைச்சியை துணிப் பையில் போட்டு வாங்கிச் செல்லும்போது அதிலிருந்து ரத்தம் சொட்டி ஏதோ தலையை வெட்டி எடுத்துச் செல்வது போன்ற பிரமை ஏற்படுகிறது.

எவர்சில்வர் பாத்திரம்
அந்தக் காலத்தில் தூக்கு வாளி எனப்படும் எவர்சில்வர் பாத்திரம், அலுமினியப் பாத்திரங்களில்தான் கறிக்கடைக்குச் செல்வது வழக்கம். அதிலும் மீன் என்றால் பேப்பரிலேயே வெட்டி எடுத்து கொண்டு வந்து விடலாம். இந்த பழைய முறைக்கு தற்போது மக்கள் மாற ஆரம்பித்துள்ளனர்.

துணிப் பையும் இருக்கு பாஸ்
அதேசமயம், கறிக் கடைகளில் துணிப் பைகளையும் வைத்துள்ளனர். ஆனால் அதற்கு தனியாக பைசா தர வேண்டும். எனவே பாத்திரமாக எடுத்துச் செல்வது பெஸ்ட் என்பது கறிக் கடைக்காரர்களின் அறிவுரையாகும். மக்களும் இப்போது பாத்திரத்துடன் கறி வாங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் நல்ல மாற்றம்தான்.

ஆரோக்கியம் காப்போமே
பிளாஸ்டிக் உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு. இன்று பாத்ரூம் டப் முதல் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களிலும் பிளாஸ்டிக் ஊடுறுவி விட்டது. அதை மொத்தமாக அகற்றுவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லைதான். இருப்பினும் சின்ன சின்னதாக மாற ஆரம்பித்தால் நிச்சயம் பிளாஸ்டிக் இல்லாத உலகை படைக்க முடியும். பழையது எப்போதுமே சுவாரஸ்யமானது, சுகமானது.. பழைய காலத்திற்கு மாறித்தான் பார்ப்போமே.. நமது நல்லதுக்காக.. பூமியின் ஆரோக்கியத்திற்காக.
-
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்!












Click it and Unblock the Notifications