5வது நாளாக மிரள வைக்கும் கொரோனா.. சென்னை பேருந்துகளிலும் இனி கட்டாயம் மாஸ்க்- மாநகராட்சி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாய முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    பொது இடங்களில் மாஸ்க் போடாதவங்களுக்கு ரூ.500 அபராதம்.. Chennai மாநகராட்சி அறிவிப்பு *Tamilnadu

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

    இந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காததுதான்.

    கொரோனா இரண்டாவது தடுப்பூசி

    கொரோனா இரண்டாவது தடுப்பூசி

    அது போல் பெரும்பாலானோர் கொரோனா இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. ஒரு சிலர் முதல் தவணை ஊசியை கூட செலுத்தாமல் இருக்கிறார்கள். ஜூலையில் கொரோனா 4ஆவது அலை அதிகரிக்கும் என ஐஐடி கான்பூர் கணித்துள்ளது. 3ஆவது அலையை போல் இந்த 4ஆவது அலையையும் முறியடிக்க அரசு தீவிர முயற்சி மேற்கொள்கிறது.

    கொரோனா உயர்வு

    கொரோனா உயர்வு

    தமிழகத்தில் இத்தனை நாட்களாக 1000 க்குள் இருந்த கொரோனா கேஸ் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் 2,662 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 5ஆவது நாளாக 1060 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    ரூ 500 அபராதம்

    ரூ 500 அபராதம்

    இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதாவது வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்டவற்றில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஒரு வேளை அணியாவிட்டால் அவர்களிடமிருந்து ரூ 500 அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    பேருந்துகளிலும் மாஸ்க் கட்டாயம்

    பேருந்துகளிலும் மாஸ்க் கட்டாயம்

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட உத்தரவில் சென்னையில் பேருந்தில் பயணிப்போர் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இதை நடத்துநர் உறுதி செய்ய வேண்டும். அது போல் நடத்துநரும் ஓட்டுநரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகம் கூடாதவாறு பார்த்துக் கொள்ள நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பேருந்து பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+