Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்தியை விடுங்க.. புதிய வேட்பாளர் மாதேஸ்வரனின் சர்ச்சை வீடியோ வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள். மாதேஸ்வரனும் மாற்றப்படுவாரா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

People wants to put right candidate instead of Kongunadu matheswaran

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய 4 கட்சிகள் தமிழகத்தில் உள்ள அதிக தொகுதிகளை பிடிக்க களமிறங்கியுள்ளன. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்த நிலையில் எல்லா கட்சியினரும் வேட்பாளர்களை நிறுத்திவிட்டார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. மீதமுள்ள ஒரு தொகுதிக்கும் ஓரிரு நாளில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் சில கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அன்றைய தினமே வேட்பாளராக சூர்ய மூர்த்தியும் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியிருந்தார்.

அவர் பேசுகையில் ஆணவப்படுகொலை செய்வேன். தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம். வரும் காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என சூர்யமூர்த்தி உளவுத் துறைக்கே சவால் விட்ட வீடியோ வைரலாகி சமூகவலைதளங்களில் பரவியது. ஆணவக் கொலையை ஆதரித்து ஒரு வேட்பாளர் பேசியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சூர்ய மூர்த்தி மாற்றப்பட்டார். தற்போது வேட்பாளராக மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கொமதேகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிபோதையில் காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் காவல் துறைக்கு சவால் விடுப்பதுமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இப்படிப்பட்ட சம்பவங்களால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். இது போன்ற சர்ச்சையான வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட அறிவிக்கக் கூடாது என்றும் மக்கள் கருதுகிறார்கள். கடந்த முறையை போல் இந்த முறையும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+