ஆன்லைன் ரம்மி தடை! தாமதத்திற்கு ‘இதுதான்’ காரணம்! அமைச்சர் ரகுபதி சொன்ன விளக்கம்! மக்களிடம் வரவேற்பு
சென்னை : எந்த நீதிமன்றத்தாலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் அந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது முதல்வரின் விருப்பம் எனவும், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மி
ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், அது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைத்து தமிழக அரசு அறிவித்தது.

வல்லுநர் குழு
தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடைமுறைகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.

ரம்மி ஒழிப்புச் சட்டம்
இது தமிழகம் முழுவதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி ஒழிப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் கொண்டு வந்தால் எந்த நீதிமன்றத்தாலும் அந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை முதல்வரின் விருப்பம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

விரைவில் சட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து பேசும்போது,"இது தொடர்பாக இரண்டு முறை ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தால் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் கொண்டு வர வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் விருப்பம். எனவே அதற்கேற்ற வகையில் தற்போது விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மிக விரைவில் அதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்படும் பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்" என கூறியுள்ளார்.

வரவேற்பு
இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுந்து வரும் நிலையில் தடை தாமதத்தால் பலரும் தமிழக அரசை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி சொன்ன விளக்கத்தை சமூக வலைதளங்களில் பலரும் ஏற்று கொண்டுள்ளனர். ஏற்கனவே சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது மிக வலுவான ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர முயற்சி செய்திருப்பது வரவேற்பதிற்குரியது எனவும், தாமதமாகவே வந்தாலும் உறுதியான உடைக்க முடியாத அளவு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications