'அண்ணன்' சீமான் வீட்டில் 'தம்பி' பேரறிவாளன், அற்புதம் அம்மாள்- நெகிழும் நாம் தமிழர் நிர்வாகிகள்!
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான பேரறிவாளன் நேற்று சந்தித்து பேசியதை நெகிழ்ச்சியுடன் அக்கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் பேரறிவாளன். உச்சநீதிமன்றத்தில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன். இவ்வழக்கு சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்றது.

இந்த வழக்கில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பேரறிவாளனின் விடுதலையை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடி வருகிறது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் என பலரையும் பேரறிவாளன் நேரில் சந்தித்து தமது விடுதலைக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார் பேரறிவாளன்.

இந்த அடிப்படையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பேரறிவாளன் நேற்று சந்தித்தார். அதற்கு முன்னதாக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியிருந்த சீமான், வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனை மொத்தம் 3,000 பேர் தான் சந்தித்திருந்தனர். நான் அந்த சிறைக்குப் போன 6 மாதத்திலேயே பேரறிவாளன் உள்ளிட்டோரை 50,000 பேர் சந்தித்தனர். என்னால்தான் பேரறிவாளன் சிறையில் இருப்பதையே இத்தனை ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவிப்பதையே வெளி உலகம் தெரிந்து கொண்டது என கூறியிருந்தார். சீமானின் இந்த் பேச்சு பெரும் சர்ச்சையாகவும் நகைப்புக்குரியதாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளன், சீமானை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் உடன் இருந்தார். மேலும் ராஜீவ் கொலை வழக்கில் வாதாடிய தடா சந்திரசேகரையும் பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். சீமான்-பேரறிவாளன் சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாகிகள் நெகிழ்வுடனும் புளகாங்கிதத்துடனும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
Recommended Video

-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications