Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கீதத்தை யார் அவமதித்தது? ஆதாரம் காட்டும் பீட்டர் அல்போன்ஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய கீதத்தை முதலில் அவமதித்தவரே ஆளுநர் ரவிதான் என பீட்டர் அல்போன்ஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்குமான மோதல் போக்கு முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. நேற்று கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறினார் ஆளுநர்.

அவரது நடவடிக்கை மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பி உள்ளது. மூத்த பத்திரிகையாளர்கள் பலர் அவை மரபுக்கு மாறாகவே ஆளுநர் ரவி நடந்து கொண்டுள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Peter Alphonse accuses Governor RN Ravi

ஆனால், இதற்கு உடனடியாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தேசிய கீதம் அவை தொடங்கும் போதும் இறுதியிலும் இசைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் வைத்திருந்ததாகவும், அதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஆளுநர் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களை பிரதிபலிக்க வேண்டும். இதைத் தவிர்த்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்கும், பாகுபாடான அரசியல் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக இருக்கக் கூடாது என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

'பாகுபாடான அரசியல் கருத்துகள்’ என்று ஆளுநர் எதைக் குறிப்பிட்டுள்ளார் என்பது அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். விளக்க வேண்டும் என்றால், 'திராவிட மாடல்’ போன்ற சொற்களைத்தான் அவர் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் எனப் புரிகிறது.

ஆனால், வழக்கம் போல் ஆளுநர் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள், அரசியல் சாசனம் என்ன சொல்கிறதோ அதைத்தான் ஆளுநர் செய்ய முடியும். உரையைத் தயாரிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உரியது. அதை அப்படியே படிக்கும் அதிகாரம் பெற்றவர்தான் ஆளுநர். அவருக்கு என்று தனி கருத்து எதுவும் சட்டத்தில் கூறப்படவில்லை என்கிறார்கள்.

Peter Alphonse accuses Governor RN Ravi

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பீட்டர் அல்போன்ஸ் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

இந்தச் சர்ச்சை குறித்து அவர்,“தேசிய கீதம் இசைக்கப்படவில்லை; எனவே வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்கிறார் ஆளுநர். தேசிய கீதத்தை அவமதித்ததே முதலில் இவர்தான். கடந்த முறை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய போது ஆளுநர் உரைக்குப் பின்னர் அவையில் இறுதியாகத் தேசிய கீதம் ஒலிக்கப்படும். அப்படி ஒலிக்கும்வரை காத்திராமல் அவமதித்துவிட்டு பாதியிலேயே வெளியே சென்றவர்தான் இந்த ஆளுநர்.

Peter Alphonse accuses Governor RN Ravi

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து. கட்சியில் தேசிய கீதம். இதுதான் அவை மரபு. காலங்காலமாக அப்படித்தான் இருந்து வருகிறது. தேசிய கீதத்தைக் காரணம் காட்டி அவர் செய்த மாபெரும் தவறை மறைக்கப்பார்க்கிறார்.

ஆளுநர் உரை என்பது அவரது நம்பிக்கை, அவர் சார்ந்துள்ள கொள்கைகளைச் சொல்லுகின்ற உரையல்ல. ஆளுநர் உரை என்பது தமிழ்நாடு அரசு தயாரிக்கின்ற உரை. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு தயாரிக்கின்ற உரை.

Peter Alphonse accuses Governor RN Ravi

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் படி It is a sovereign government. அந்த அரசு கொடுக்கும் உரையைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும். இவர் அதைப் படிக்க மாட்டேன் என்று சொல்வது, அவருக்கு ஆளுநர் பதவியை வகிக்க, எனக்கு ஆசை இல்லை, விருப்பம் இல்லை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

அவர் வேண்டுமானால் அரசுக்குத் தெரிவிக்கலாம். 'என்னால் அரசுக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மாநில அரசு தயாரிக்கின்ற உரைகளை என்னால் படிக்க முடியவில்லை.

இந்த மாநில அரசுடன் இணைந்து என்னால் வேலை செய்ய முடியவில்லை. ஆகவே என்னை வேறு பணிக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுகிறேன்’ என்று அவர் கேட்டால் அதுவே சிறப்பானதாக இருக்கும்.

எனவே இந்த ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

Peter Alphonse accuses Governor RN Ravi

சட்டமன்றம் என்பது தன்னாட்சி உரிமை பெற்றது. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம். அதை இந்த ஆளுநர் அவமதிப்பது என்பது இந்திய அரசியல் வரலாற்றில் மற்றும் அல்ல தமிழக ஆளுநர்கள் சரித்திரத்தில் இது ஒரு கரும்புள்ளி.

அரசியல் சாசனம் என்ன சொல்கிறது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மாநில அரசின் கொள்கைகளை மீறி ஆளுநர் செயல்படுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

Peter Alphonse accuses Governor RN Ravi

மாநில அரசு எழுதித் தந்துள்ள உரையில் உள்ளக் கருத்துகள் எனக்கு உடன்பாடு இல்லை என்றார் ஆளுநர். அவருக்கு உடன்பாடு இருக்க வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் எழுதப்படவில்லை. அரசு தயாரிக்கின்ற எந்தக் கருத்துகளிலும் உங்களுக்கு உடன்பாடு இருக்கவேண்டும் என்பதுதான் சட்டம்.

குடியரசு உரையை யார் தயாரிக்கிறார்? முர்முவா தயாரிக்கிறார்? ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுக்கிறது. அந்த உரையைக் குடியரசுத் தலைவர் படிக்கிறார்” என்று கூறுகிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+