Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் நச்சு விதைகளை விதைப்பதா? ஆளுநர் ரவிக்கு பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் தமிழ்நாட்டு ஆளுநர் ரவி நச்சு விதைகளை விதைப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் தன்னிச்சையாக உரையை வாசித்த விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும் இந்தப் போராட்டங்களில் இணைந்து கொண்டுள்ளனர்.

Peter Alphonse condemns Tamilnadu Governor RN Ravi

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே சென்னை ஆளுநர் மாளிகையில் இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக எண்ணித் துணிக என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி பேசுகையில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி பிரச்சனைகளின் போது மத்திய அரசு பக்கம்தான் நிற்க வேண்டும். மத்திய அரசு சொல்வதைத்தான் அந்த அதிகாரி கேட்க வேண்டும். அதிகாரிகள் என்பவர் குடிமைப் பணிக்காக மத்திய அரசால்தான் தேர்வு செய்யப்படுகிறவர்கள் என கூறியிருந்தார்.

மேலும் மத்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. ஒன்றிய அரசு என்பதை அரசியலாக்கும்போது தான் பிரச்னை எழுகிறது. ஒன்றிய அரசு என்று அவமரியாதையாக அழைக்கின்றனர். அதுதான் பிரச்சனைக்கு காரணம். இந்தியா என்பது பல்வேறு இனக்குழுக்கள், பல கலாசாரங்களுட வாழுகிற நாடு. ஒரே இன மக்கள் மட்டுமே வாழ்கிற பகுதியும் அல்ல. ஒரே பகுதியில் ஒரு இனக்குழு வாழ்கிறது என்பதற்காக நாம் அந்த பகுதியை அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட முடியாது எனவும் ஆளுநர் ரவி பேசியிருந்தார்.

இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ரயில் தண்டவாளங்களைப் போன்று ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒன்றாகப் பயணித்தால்தான் இந்திய அரசியல் சாசனச் சட்டம் செயல்படும். இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் நச்சுவிதைகளை விதைப்பதை அனுமதிக்கக்கூடாது.ராஜ்பவனில் நடக்கும் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் யார் செலவில் நடக்கின்றன? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,தேச ஒற்றுமைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரான இதைப்போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளை உடனடியாக குடியரசு தலைவர், பிரதமர்,உள்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

Peter Alphonse condemns Tamilnadu Governor RN Ravi

ராஜ்பவனில் நடக்கும் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் யார் செலவில் நடக்கின்றன? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,தேச ஒற்றுமைக்கும் கூட்டாட்சி த்த்துவத்திற்கும் எதிரான இதைப்போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளை உடனடியாக குடியரசு தலைவர், பிரதமர்,உள்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+