காலத்தின் கட்டாயம்.. ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம்! திமுக தேர்தல் அறிக்கை பற்றி கனிமொழியிடம் மனு
சென்னை: தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க வேண்டும் என எம்பி கனிமொழியை சந்தித்து தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
2024 மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தி.மு.க தலைமை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கியது. சென்னையில் இந்த குழு தனது பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறது.

திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், கோ.வி.செழியன், மருத்துவர் எழிலன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருக்கின்றனர்.
இந்த குழு தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் பற்றி கருத்துகேட்டு வருகிறது. அந்த கருத்துக்களை பரிசீலித்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கனிமொழி தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது.
அந்த மனுவில், "1. ஜாதி ஆணவபடுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
2. சுயமரியாதை & ஜாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய பெற்றோர் சம்மதம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் திருமணத்தை பதிவு செய்ய மறுக்கக்கூடாது என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
3. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடும் தொகையினை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்
4. இந்திய ஒன்றிய அரசு "அம்பேத்கர் பவுண்டேசன்" கீழ் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு வழங்கும் 2.5 லட்சம் தொகையை அனைத்து ஜாதிமறுப்பு இணையர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலாளர் ரமேஷ் பெரியார் தெரிவிக்கையில், "எங்கள் கோரிக்கையை மிக கவனமாக கேட்டுக்கொண்டார்கள். நிறைவேற்றி தருகின்றோம் என்று உறுதி அளித்தார்கள். நிகழ்வில் வணக்கத்துகுரிய சென்னை மேயர், T.K.S இளங்கோவன், எம்.எம்.அப்துல்லா, எழிலரசன், ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோரும் நம்பிக்கை தரும் விதமாக பேசினார்கள்." என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications