வாகன ஓட்டிகளே.. தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.. இப்பவே ஃபில் செய்யுங்க!
சென்னை: தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6ஆவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வரும் 6-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும். காய்கறி கடை, மளிகைக் கடைகளுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆம்புலன்ஸ், பால், மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும். திங்கள்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications