அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை!
சென்னை: போர் காரணமாக, இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்திருக்கிறது. இப்படி இருக்கையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
வழக்கமாக கலால் வரி குறைகிறது எனில், மொத்தமாக பெட்ரோல், டீசல் விலை சட்டென குறைந்துவிடும். ஆனால், இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை.

என்ன நடந்தது?
வளைகுடா போர், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவே நிலமையை சரி செய்ய மத்திய அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலிருந்து எரிபொருள் கொள்முதலை இரட்டிப்பு செய்திருக்கிறது. அதேபோல, ரஷ்ய கச்சா எண்ணெய்யை மீண்டும் சலுகை விலையில் பெற பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கிறது.
முக்கிய மீட்டிங்
இது தொடர்பாக நேற்று கேபினேட் மீட்டிங் நடைபெற்றது. அதில் உள்துறை, பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட அமைச்சர்கள் உட்பட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு என்பது மத்திய அரசை அச்சமடைய செய்திருக்கிறது. நயாரா நிறுவனம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 என விலையை உயர்த்தியிருக்கிறது.
கலால் வரி குறைப்பு
எனவே மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்த ரெடியாகி வந்தன. இப்படி இருக்கையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.13 கலால் வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, டீசலுக்கு விதிக்கப்பட்டிருந்த கலால் வரி, ரூ.10 முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக கலால் வரியில் மாற்றம் செய்தால், அது உள்ளூர் லோக்கல் பெட்ரோல் பங்கில் எதிரொலிக்கும்.
ஏன் விலை குறையவில்லை?
ஆனால், இந்தமுறை விலை குறைவு எதிரொலிக்கவில்லை. காரணம் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்திருக்கிறது என்பதுதான். இந்த விலை உயர்வு, காலால் வரி குறைப்பை ஈடு செய்திருக்கிறது. எனவே, சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. ஈரான் போர் முடிவும் வரையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.
அதேபோல தற்போது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், விலை ஏற்றம் பாஜகவுக்கு எதிராக அமைந்துவிடும். இதனால்தான், நிலைமையை சமாளிக்க கலால் வரி நீக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
-
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
மேற்காசிய போர் பதற்றம்.. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!














Click it and Unblock the Notifications