தான் படித்த டான்பாஸ்கோ பள்ளி.. வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிய உதயநிதி! வைரல் போட்டோ
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், டான்பாஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது தான் படித்த டான்பாஸ்கோ பள்ளியின் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்
தமிழ்நாட்டில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்குச் சென்றனர்.
இந்நிலையில் ,டான்பாஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் ஆய்வு செய்த உதயநிதி தான் படித்த வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பள்ளிகள் திறப்பு
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 2ஆம் அலையும் முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. பள்ளிகளைப் பொறுத்தவரை முதற்கட்டமாக 9 முதல் +2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் இதர மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வழிகாட்டுதல்கள்
இதற்கான தேவையான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதேபோல பள்ளி, கல்லூரிகள் முழுமையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களில், பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்றும் மாணவர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன மேலும், நீண்ட காலத்திற்குப் பின் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவதால் எடுத்தவுடன் பாடங்களை நடத்தாமல், உளவியல் ரீதியாக மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video

அமைச்சர் ஆய்வு
இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்குத் திரும்பினர். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். அப்படி எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அவருடன் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதியும் உடன் இருந்தார்.

உதயநிதி வைரல் போட்டோ
அப்போது தான் படித்த டான்பாஸ்கோ பள்ளியின் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களுடன் உதயநிகி கலந்துரையாடினார். இது குறித்து உதயநிதி தனது ட்விட்டரில், "பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். நான் அன்று பாடம் பயின்ற அதே வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. என் ஆசிரியர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications