வெறும் 24 வயசுதான்.. ஆனால் தேவி செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்!
ரயில்களில் பயணிகளிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: 24 வயது தேவி, புறநகர் ரயில்களில் செய்து வந்த காரியம் ஒவ்வொன்னும் போலீசாரை அதிர வைத்துள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, பூங்கா ரயில் நிலையங்களில் அடிக்கடி பயணிகளின் செல்போன், பணம் திருடு போவதாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது யார் என கண்டறிய முற்பட்டனர். அப்போது சிக்கியவர்தான் தேவி.

செங்கல்பட்டு நோக்கி செல்லும் எலக்ட்ரிக் ரயில் ஒன்று பூங்கா ஸ்டேஷன் வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த தேவி மீது போலீசாருக்கு சந்தேகம் வரவும், அழைத்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் தேவி முன்னுக்குப் பின் முரணாக பேசவும், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். சொந்த ஊர், ஜோலார்பேட்டை என்பதும், கணவர் பெயர் ஏழுமலை என்பதும் தெரியவந்தது.
கூட்டமாக இருக்கும் புறநகர் ரயில்களில் ஏறி கொண்டு, பயணிகள் பக்கத்தில் நெருக்கமாக இருந்து நகை பணம், பர்ஸ்களை கொஞ்ச நேரத்தில் அடித்து விடுவாராம். திருடுவதுதான் முழு நேர பொழப்பாம்.. அவரிடம் சோதனை செய்தபோது, பயணிகளிடம் இருந்து அப்போது ஆட்டைய போட்டிருந்த 8 பவுன் நகைகள் மற்றும் 46 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தேவியையும் கைது செய்து புழலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications