Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஹோட்டலில் சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி மயக்கம்.. சாம்பாரை கிளறிய போது அதிகாரிகளுக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உணவகத்தில் உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அதை உணவு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனையிட்ட போது அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னை திநகரில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பி்ட்டுக் கொண்டிருந்தநர். அப்போது உணவின் ருசியில் மாற்றம் இருப்பதை உணர்ந்து வாடிக்கையாளர்கள் ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டனர்.

Plastic cover found in Hotel Sambar near TNagar, very famous restaurant

உணவருந்திய அனைவருக்குமே இது போன்றதொரு உணர்வு ஏற்பட்டதை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.

அப்போது அதிகாரிகள் அங்கிருந்த உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். அதில் சாம்பாரை கரண்டியால் கிளறிய போது அதிலிருந்து பிளாஸ்டிக் கவர் இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உணவக உரிமையாளரை கடுமையாக வசை பாடினர். மேலும் சில உணவு பொருட்கள் மீது ஈக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதையும் கண்டு கோபமடைந்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை சோதனை செய்த போது அவை கெட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது போன்ற கெட்டு போன பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தியதால்தான் வாடிக்கையாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஹோட்டல் நடத்துபவர்களை அன்னபூரணியுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம். ஆனால் அவர்கள் இது போல் உணவு விவகாரத்தில் அலட்சியப்போக்காக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+