திடீர் தலைசுற்றல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரிப்பு
சென்னை: திடீர் தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை வழக்கம்போல் நடை பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து உடனடியாக மனைவி துர்கா ஸ்டாலின், துணைமுதல்வரும் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டது. அதில் லேசான மயக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பலரும் தொடர்ந்து நலம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சரிடம் நலம் விசாரித்திருக்கிறார்.
முன்னதாக நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோரும் நலம் விசாரித்த இருந்தனர். சிகிச்சை விவரங்கள் குறித்து பேசியிருந்த அமைச்சர் துரைமுருகன், "முதலமைச்சருக்கு எதுவும் இல்லை. நலமாக இருக்கிறார். இன்று மாலை கூட அவர் வீடு திரும்பலாம்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications