மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா 10 பொதுக்கூட்டம்.. வெற்றிக்காக மோடி கடும் முயற்சி
சென்னை: சட்டசபை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகபட்சமாக 10 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
நவம்பர் 28ஆம் தேதி மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. ராஜஸ்தானில் 200 தொகுதிகள் உள்ளன. இங்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இவ்விரு மாநிலங்களிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
இவ்விரு மாநிலங்களிலும் தற்போது, பாஜக அரசு நடைபெறுவதால், அதை இழந்துவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ள மோடி, தீவிர பிரச்சாரங்களுக்கு திட்டமிட்டுள்ளார்.
நவம்பர் 25-ம் தேதி, ம.பியில், ஆழ்வார் நகரில் முதல் பேரணி நடத்த உள்ளார் பிரதமர் மோடி. அதே நாளில் விதிஷா மற்றும் ஜபல்பூர் ஆகிய நகரங்களிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு நிறைவு செய்கிறார் மோடி.
அதற்கு மறுநாளே ராஜஸ்தான் வருகை தரும் மோடி, பில்வாரா, பனேஸ்வர் தாம், கோட்டா நகரங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதே நாளில் அதாவது நவம்பர் 26ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ராஜஸ்தானில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்.
நவம்பர் 28ஆம் தேதி, மோடி, ராஜஸ்தானின் நாகூர், பரத்பூர் ஆகிய நகரங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள, தெலுங்கானாவில் மூன்று இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அம்மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுவதால் ஆட்சியை பிடிப்பது இயலாத காரியம் என்கிறது கள நிலவரம். வருகிற நவம்பர் 27ஆம் தேதி மற்றும் டிசம்பர் 3ஆம் தேதி ஆகிய நாட்களில் தெலுங்கானாவில் மொத்தம் மூன்று இடங்களில் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.












Click it and Unblock the Notifications