உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சென்னை: உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் தை 1-ந் தேதியும் சித்திரை 1-ந் தேதியும் தமிழ்ப் புத்தாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது; இன்று சித்திரை 1-ந் தேதியை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தமிழர்களுக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன் என வாழ்த்தியுள்ளார்.

மோடி தமிழில் வாழ்த்து
பிரதமர் மோடி தமது வாழ்த்தில், அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா வாழ்த்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அமித்ஷா ஆங்கிலத்தில் தமிழர்களுக்கு புத்தாண்டை வாழ்த்தை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மே.வங்க முதல்வர் மமதா
இதேபோல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் தமது ட்விட்டர் பக்கத்தில், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத்திலும் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் மமதா பானர்ஜி அதில் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications