அட.. அட.. பாமகவிற்கு இவ்வளவு மரியாதையா?.. ராமதாஸை சிறப்பாக கவனித்த மோடி!
பாஜக சென்னையில் நடத்தி வரும் மாபெரும் மாநாட்டில் பாமக கட்சிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: பாஜக சென்னையில் நடத்தி வரும் மாபெரும் மாநாட்டில் பாமக கட்சிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் பாஜக சார்பாக பெரிய பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருக்கிறார். அதேபோல் இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி அன்புமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் ஒரே மேடையில் உள்ளனர்
ஆனால் இத்தனை தலைவர்கள் இருந்தாலும், பிரதமர் மோடி அதிகம் கவனம் செலுத்தியது பாமக நிறுவனர் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
காவி மேடையில் திராவிட நாகரீகம்.. மோடிக்கு செங்கோல் கொடுத்து அசத்திய தலைவர்கள்!
விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, பாமக நிறுவனர் ராமதாஸை பார்த்ததும் சந்தோசமாக கைகுலுக்கினார். இருவரும் நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அதன்பின் மீண்டும் மோடி ராமதாஸுக்கு கைகுலுக்கினார்.
அதன்பின் இவர்கள் இருவரும் சில நிமிடம் தனியாக பேசிக்கொண்டார்கள்.மோடியிடம் ராமதாஸ் சில முக்கிய கோரிக்கைகளை வைத்தார்.
இதில் மற்ற கட்சிகளை விட பாமகவிற்கு அதிக மரியாதை அளிக்கப்பட்டது. எப்படி கூட்டணியில் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டதோ அதேபோல், கூட்டணி மேடையிலும் அவர்களுக்கு அதிக மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியே ராமதாஸுக்கு இவ்வளவு மரியாதை அளித்தது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.