பயப்பட வேண்டாம் என்று.. கூட்டணி கட்சியிடம்தான் பிரதமர் மோடி சொல்ல வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: இது ஜனநாயக நாடு, யாரும் யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்று பிரதமர் மோடி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், "பயப்பட வேண்டாம் என்று கூட்டணி கட்சியிடம் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
மத்திய விசாரணை, புலனாய்வு அமைப்புகளை பார்த்து எடப்பாடி பழனிசாமி பயப்படுவதை போல நாங்கள் பயப்பட மாட்டோம். மோடி மட்டுமல்ல, அவருடைய அப்பா வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதற்கு நேற்று மதுரையில் நடந்த என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலளித்திருந்தார். ஜனநாயக நாட்டில் யாரும், யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றும், இதை பாஜக அரசு உறுதி செய்திருப்பதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், பயப்பட வேண்டாம் என்று முதலில் உங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications