பிரதமர் மோடி சொன்ன ‘திருக்குறள்’.. விவேகானந்தரை ஹீரோ போல வரவேற்றது தமிழ்நாடு என பேச்சு!
சென்னை : சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடிக்கு, நினைவுப் பரிசாக விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளனர். விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளார். ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, "பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார். அவரது நோக்கத்தை அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார். தங்கள் மீதான தடைகளை பெண்கள் தகர்த்தெறிந்து வருகின்றனர். விவேகானந்தர் வலியுறுத்திய பெண்கள் முன்னேற்றத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. விவேகானந்தரை ஹீரோ போல வரவேற்ற இடம் தமிழ்நாடு" என்றார்.
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். இதையடுத்து விவேகானந்தர் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்துக்குச் சென்று 30 நிமிடங்கள் தியானம் செய்கிறார். பிரதமர் மோடி விவேகானந்தர் இல்லத்துக்கு வருவதால் இன்று பிற்பகல் முதல் விவேகானந்தர் இல்லத்துக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

பிரதமர் மோடி வருகையையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு மணல் பரப்பு முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களிலும் போலீசார் ஏறி நின்று பைனாகுலர் மூலமாக கண்காணித்தனர்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!











Click it and Unblock the Notifications