ராமதாஸ், அன்புமணி இடையே விரிசல்! தைலாபுரம் தோட்டத்தில் திலகபாமா அரசியல்! பாமக நிர்வாகி கண்டனம்
சென்னை: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விவகாரத்தில் திலகபாமா அரசியல் செய்யக் கூடாது என பாமகவின் கொள்கை பரப்பு செயலாளர் பாரி மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே இளைஞரணித் தலைவர் நியமனத்தின் போது மேடையிலேயே அப்பட்டமாக சண்டை வந்தது. தனது மகள் வழி பேரன் முகுந்தனுக்கு அந்த பதவி கொடுப்பதாக ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க, புதியவருக்கு இத்தனை பெரிய பொறுப்பை கொடுக்கலாமா என கேட்டார். அதற்கு ராமதாஸ், இது என் கட்சி, விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம் என தெரிவித்தார்.
பனையூர் அலுவலகம்
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பனையூரில் உள்ள அலுவலகத்தில் தன்னை சந்திக்க வரலாம் என அன்புமணி கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார். இதன் பிறகு புத்தாண்டு விழா, பொங்கல் விழாக்களில் தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை நிலவியதாக சொல்லப்பட்டது.
அன்புமணி செயல்தலைவர்
இந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி தலைவராக நானே தொடர்வேன். அன்புமணி செயல் தலைவராக தொடர்பாக என தெரிவித்திருந்தார். அன்புமணி ஏன் நீக்கம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும் அவற்றை சிறுக சிறுக தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
திலகபாமா
இந்த நிலையில் பொருளாளர் திலகபாமா, பாமகவில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவர் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம் என கருத்து தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து ராமதாஸை சமாதானப்படுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஒரு மணி நேரம் காத்திருந்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
திலகபாமா செயல்
இந்த நிலையில் திலகபாமாவின் செயலை கண்டித்து கொள்கை பரப்பு செயலாளர் பாரி மோகன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மரு.அய்யாவிற்கு அடுத்து சின்ன அய்யா அவர்கள் தான் பாமகவின் தலைமை, பாமகவை வழிநடத்தப் போகிறவர். இதில் எள் அளவிற்கு கூட கடைநிலை தொண்டர்கள் வரை சந்தேகமில்லை .
பிரதான கட்சி
இந்த கட்சி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. எவ்வளவு தியாகங்கள் , எவ்வளவு போராட்டங்கள் , எவ்வளவு அடக்கு முறைகளை கடந்து இன்று தமிழகத்தில் பிரதான கட்சி என்ற நிலைக்கு வந்திருக்கிறது என்பதை முதலில் பொருளாளர் உணர வேண்டும்.
வன்னியர் சங்க காலம்
வன்னியர் சங்க காலம் தொடங்கி உழைத்தவர்கள் பலர் அமைதி காக்கும் போது , ஊடகங்கள் மூலம் இது போன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். கட்சிக்காக உழைக்கும் உண்மை தொண்டர்களுக்கு இது மிகுந்த மன வேதனை அளிக்கும்.
புதியவர்
திலகபாமா இதில் அரசியல் செய்யக்கூடாது. கட்சிக்காக உழைத்த மூத்தவர்கள் ஏராளமனோர் உள்ளனர் , திலகபாமா புதியவர் பொறுமை காக்க வேண்டும் . இவ்வாறு அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications