Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினிடம் நெருங்கிய டாக்டர் ஐயா.. தைலாபுரம் சும்மா அதிருதுல்ல! வெடிக்கிறது பாமக போராட்டம்.. திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்துக்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில், கடந்த 2 வருடங்களாகவே, திமுக தரப்பை, பாமக மேலிடம் அதிகமாகவே நம்பி வந்தது.. "அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார், அதனால் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமிருக்காது" என்று பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸும் ஒருமுறை கூறியிருந்தார்.

PMK Dr Ramadoss says about MK Stalin DMK Government in Thailapuram and date for Reservation protest to be announced


ராமதாஸ்:
அதற்கேற்றவாறு கடந்த 2 வருடங்களாகவே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சரி, அன்புமணியும் சரி, திமுகமீது எந்தவிதமான ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தாமலேயே இருந்ததை மற்ற அரசியல் கட்சிகளும் உற்றுகவனிக்கவே செய்தன.

ஆனால், நெய்வேலி போராட்டத்தில், திமுகவை நேரடியாகவே பாமக அட்டாக் செய்ய துவங்கியது.. இதற்கு பிறகு லோக்சபா தேர்தல் தீவிரமாகவும், திமுக மீதான விமர்சனங்களை பாமக கணிசமாக குறைத்துவிட்டது. ஒருவேளை திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போகிறதோ? என்ற சந்தேகமும் வலம்வந்தது..

சந்திப்பு: இதற்கு பிறகு, தன்னுடைய பிறந்தநாளின்போது, பாமக தலைவர் அன்புமணி, நேரடியாகவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்திருந்தது.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, வன்னியர் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்காக முதல்வரை சந்தித்ததாக காரணம் கூறியிருந்தார்.

அன்புமணி, நேரிலேயே முதல்வரை சந்தித்து வலியுறுத்தியும்கூட, சாதிவாரி கணக்கெடுப்பினை திமுக முன்னெடுக்காதது பாமகவுக்கு வருத்தம்தான் என்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை பாமக அள்ளிவீசியிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு முதல், கஞ்சா விற்பனை, மேகதாது பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு, அதில் திமுக அரசையும் நேரடியாகவே சாடியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்..

தைலாபுரம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது...

ஆனால், பீகார், ஆந்திரா, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவிலும் இந்த நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. இனியும் மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காலம் கடத்தாமல், தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

சமூகநீதி: சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசிவருகின்றன.. ஆனால், சமூகநிதியை விடாமல் பேசி வருவது பாமகதான்.. சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக அரசு திருத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும்... ஆனால் 2 வருடங்களாகியும் இடஒதுக்கீட்டை வழங்கவில்லை.

மேகதாதுவில் அணைகட்டுவோம் எனறு அந்த மாநில சொல்வது கண்டிக்கதக்கது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும்... ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார்.

கஞ்சா போதை: தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசும், போலீசாரும் நினைத்தால் இந்த கஞ்சா நடமாட்டத்தை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்தலாம்.. ஆனால், போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. கஞ்சா விற்பவர்கள் கைதானாலும், மறுநாளே விடுதலை ஆகிவிடுகிறார்கள்.. ஆந்திராவிலிருந்துதான் கஞ்சா வருவதாக போலீசார் சொல்கிறார்களே, அப்படியானால், ஆந்திராவிற்கே சென்று ஏன் கஞ்சா தோட்டங்களை அழிக்கவில்லை?

தனிநபர் வருமானம்: திருவாரூர், திருவள்ளுவர், விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுகிறது. தனிநபர் வருமானம் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் பல வருடங்களாக குறைந்து உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைத்து தனிநபர் வருமானத்தை பெருக்கலாம். ஆனால் இதனை அதிமுகவும், திமுகவும் செய்யவில்லை" என்று இரு கட்சிகளையுமே சாடினார் டாக்டர் ராமதாஸ்..!!

நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில்கூட, இந்த அளவுக்கு திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்காத நிலையில், பாமக போராட்டத்தை அறிவித்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு திமுக என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+