திமுகவின் புழுகு மூட்டையை நம்பி மக்கள் ஏமாற்றம்- ராமதாஸ் வேதனை
Recommended Video
சென்னை: ஏமாற்றுக்காரர்களிடமும், பொய்யர்களிடமும் மக்கள் ஏமாறுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வலியுறுத்தி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்ததற்காக பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேற்றிரவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ராமதாஸ், உருக்கமாக பேசினார்.

வேலூர் மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக முதல் குரல் கொடுப்பது பா.ம.க.தான் என்றும், திமுகவோ, மற்றக்கட்சிகளோ பாமக அளவுக்கு போராட்டம் நடத்தியதில்லை எனவும் கூறினார். மேலும், திமுகவின் கவலையெல்லாம் வாக்குகளை பெறுவது பற்றியும், ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாகவும் தான் இருக்கிறது, மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் அவர்கள் எனத் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட பிரச்சனைகளுக்காக பாமக நடத்திய போராட்டங்களை, கடந்த தேர்தலில் மக்கள் நினைத்துப் பார்க்க தவறிவிட்டதாக கூறிய ராமதாஸ், எதிர்க்கட்சியின் பொய்யையும், புழுகு மூட்டையையும் நம்பி அவர்களுக்கு வாக்களித்து விட்டதாக பேசினார். மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கும் பாமகவை மறந்து, பொய்யர்களிடம் ஏன் ஏமாறுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய ராமதாஸ், பாமக பின்னால் வந்தால் மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என உறுதியளித்தார்.
முதுமையில் தன்னால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், கோலூன்றியாவது இந்த தமிழ்ச்சமூகத்துக்கு போராடுவேன் என உருக்கமாக பேசிய அவர், தாங்கள் கோடம்பாக்கத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல என்றும், விவசாய பெருங்குடிகள் எனவும் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications