சேலத்தில் நாளை அன்புமணி கூட்டம்.. பாமக எம்எல்ஏ அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பாமகவின் முக்கிய நிர்வாகியான எம்எல்ஏ அருளுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம் வந்த பாமக எல்எல்ஏ அருள், திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்தார். இதன்பின் அவரின் உதவியாளர்கள் உடனடியாக தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீதும், அவரின் மனைவி செளமியா மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்து வருகிறார். தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று ராமதாஸ் அறிவித்து இருக்கிறார்.

இன்னொரு பக்கம் அன்புமணியும் அழைப்பிதழில் ராமதாஸ் புகைப்படத்தை புறக்கணித்து, ராமதாஸ் ஆதரவாளரான அன்பழகனை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார். இதன்பின் திடீரென, என்னை மன்னித்துவிடுங்கள்.. என்ன தவறு செய்தேன்.. நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
இருந்தாலும் அன்புமணியின் மன்னிப்புக்கு ராமதாஸ் பக்கம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. ராமதாஸ் வழக்கம் போல் பாமக நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள் மொழி மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே பாமகவில் சுமூக உடன்பாடு ஏற்படாத நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ராமதாஸ் பக்கம் இருப்பதாக அறிவித்தார். ராமதாஸ் தலைமையில் இருப்பதே பாமக, மற்ற கூட்டங்கள் பற்றி தெரியாது என்றும் வெளிப்படையாக கூறினார். இந்த நிலையில் பாமக எல்எல்ஏ அருள் சபாநாயகரை சந்திப்பதற்காக தலைமைச் செயலகம் வந்தார்.
அப்போது திடீரென அருளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருளுக்கு முதலுதவி செய்யப்பட்டது. இதன்பின் ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தில் நாளை அன்புமணி தலைமையில் பாமக கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பாமக நிர்வாகிகள் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் புதிய விவாதம் தொடங்கி இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications