அரசியல் முட்டு சந்தில் ராமதாஸ்.. அதிமுகவுடன் கூட்டணியா? கேட்டை மூடிய எடப்பாடி.. அடிவருடிகள் அப்செட்!
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் இணைந்திருக்கும் நிலையில் பாமகவின் நிறுவனரான ராமதாஸ் திமுகவுடன் பேச்சு நடத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை காரணம் காட்டி ராமதாசை கூட்டணிக்குள் சேர்க்காத நிலையில் மீண்டும் அதிமுக கூட்டணி கதவை ராமதாஸ் தட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ராமதாஸுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என அன்புமணி தரப்பு தெள்ளத் தெளிவாக சொல்லி உள்ளது. இதை அடுத்து எந்த ரூபத்திலும் ராமதாஸ் தரப்புக்கு அதிமுக கூட்டணியில் இடமில்லை என திட்டவட்டமாக எடப்பாடி தரப்பு சொன்னதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாக பாமக கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது.

பாமக உட்கட்சி மோதல்
கட்சியின் கூட்டணி அரசியல் மற்றும் தேர்தல் திட்டங்கள் போன்ற விஷயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளே இந்த பிரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அதிமுக தலைமை வகிக்கும் இந்த கூட்டணிக்கு முக்கிய பலமாக பாமக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அதே நேரத்தில், ராமதாஸ் தரப்பு ஆரம்பத்தில் திமுக கூட்டணியுடன் இணைய ஆர்வம் காட்டியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின.
அன்புமணி - ராமதாஸ்
ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் பாமக கட்சியின் ஒற்றுமையை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரைக் மீண்டும் ஒன்றிணைக்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் சூழலில் பாமக முழுமையாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் அது கூட்டணிக்கு கூடுதல் பலம் தரும் என்ற கணிப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புமணி ராமதாஸ்
ஆனால் இந்த முயற்சிக்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ராமதாஸுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் அன்புமணி உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக மேற்கொள்ளும் சமரச முயற்சிகள் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மற்றொரு பக்கம், ராமதாஸ் தரப்பு பாஜக-அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
எந்த வகையிலும் ராமதாஸ் அந்த கூட்டணிக்கு வரக் கூடாது என்ற கருத்தில் எடப்பாடி பழனிசாமியும் இருப்பதாக கட்சித் தரப்பில் கூறப்படுகிறது. கட்சி, சின்னம், பெயர், கொடி ஆகியவை அன்புமணி ராமதாஸூக்கு தான் என தேர்தல் ஆணையம் சொல்லிவிட்ட நிலையில், பெரும்பாலான நிர்வாகிகல் ஆதரவு அன்புமணிக்கு தான் உள்ளது. இதனால் தான் அதிமுக கூட்டணியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவருக்கு 18 முதல் 20 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாமக கூட்டணி
அதோடு, அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாமக கூட்டணியில் நிலைத்திருக்கவும், வட தமிழகத்தில் கூட்டணியின் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ராமதாஸ் தரப்பு மீது ஏற்கனவே அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே ராமதாஸ் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது.
அருள், ஜி கே மணி
விஜயுடன் கூட்டணி, திமுகவுடன் கூட்டணி, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி என பல யூகங்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுக தரப்பிலும் பாமக தரப்பிலும் விசாரித்த போது ராமதாசை யாருமே கூட்டணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்கின்றனர். மேலும், கடைசி நேரத்தில் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றால் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சொல்லும் பாட்டாளிகள் அருள், ஜி கே மணி உள்ளிட்டோர் கிளப்பி விடுவது தான் இது போன்ற தகவல்கள் என்றும் சொல்லப்போனால் அரசியலில் முட்டு சந்தில் நிற்கிறார் ராமதாஸ் என்கின்றனர்.
-
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
வாஷிங் மெஷின் வாங்க ரூ.8000! அடமானமில்லா 5 லட்சம் கடன்! வைரலாகும் திமுக கனிமொழியின் முதலீடு தந்திரம் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட்












Click it and Unblock the Notifications