Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த கையில் கொடுத்து.. அந்த கையில் பிடுங்கிறுவாங்க! டாஸ்மாக்கு போகும் பொங்கல் பரிசு! விளாசிய செளமியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழத்தில் மக்களின் வரிப்பணத்தை பொங்கல் போனஸாக கொடுத்து, மீண்டும் டாஸ்மாக் மூலம் திரும்ப பெறும் திட்டமே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 வழங்கும் திட்டம் என்றம், திமுக அரசு பெரிய திட்டங்களை அறிவித்து விட்டு அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும் பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி, தனது 'சிங்கப் பெண்ணே எழுந்து வா' என்ற தலைப்பிலான மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கினார்.

Sowmiya Anbumani pmk tasmac

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வயலப்பாடி பகுதியில் மகளிர் உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது. பாமக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு பேசினார்.

சௌமியா அன்புமணி

நிகழ்ச்சியில் பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அமைப்பு நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சௌமியா அன்புமணிக்கு மேளதாளத்துடன் வான வேடிக்கையுடன் மலர் தூவி பெண்கள் வரவேற்றனர். தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி," திமுக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்துமே கிடப்பில் போடப்படும் திட்டங்கள் மட்டும் தான்.

டாஸ்மாக்

திமுக அரசு பெரிய திட்டங்களை அறிவித்து விட்டு அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு சேமித்து வைக்க கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி தராமல் டாஸ்மாக் மதுபானங்களுக்கு மட்டுமே கிடங்குகளை அமைத்துள்ளனர்.

பொங்கல் பரிசு

மேலும் சிறப்பு பொருளாதார மண்டலம். மருத்துவக் கல்லூரி போன்ற பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அறிவித்து விட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் பெரம்பலூர் மாவட்ட மக்களை திமுக அரசு வஞ்சித்து விட்டது. சௌமியா அன்புமணி தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது.

அன்புமணி ராமதாஸ்

மக்களின் வரிப்பணத்தில் இருந்து மூவாயிரத்தை கொடுத்துவிட்டு அதனை மீண்டும் டாஸ்மாக் கடை மூலம் திரும்ப பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இப்படி ஏழை எளிய மக்களை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துவிட்டு பொது மக்களை ஓட்டு போடும் மெஷின்களாக நடத்தி வருகின்றனர் என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர் டாஸ்மாக்கை ஒழித்திட ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் செழித்திட அன்புமணி பக்கம் நீங்கள் அனைவரும் நிற்க வேண்டும்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+