வள்ளுவர் மறை.. வைரமுத்து உரை! எப்படி இருக்கும்? இதோ.. ஒரு பதச்சோறு
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளூவர் மறை, வைரமுத்து உரை எனும் நூல் ஜூலை 13ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். இந்நிலையில் இந்த நூல் எப்படி இருக்கும் என்பதற்கான விளக்கத்தை வீடியோ மூலம் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின், என்கிற 969வது குறளுக்கு காலங்காலமாக ஒரு பிழைப்பட்ட பொருளே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 'கவரி மான்' என்று பொருள் கொண்டு ஒரு மயிர் உதிர்ந்து விட்டாலும், கவரி மான் இறந்துவிடும். அதுபோல, மானத்தை இழந்தவர்கள் உயிரிழந்துவிடுவார்கள் என்பது சொல்லப்பட்டு வந்த பொருள்.

ஒரு மயிர் உதிர்வது என்பது எந்த விலங்குக்கும் எளிதான விஷயம்தான். அது வளர்சிதை மாற்றம்தான். ஒரு மயிர் உதிர்வதால் எந்த விலங்கும் இறந்துவிடுவதாக அறிவியல் கூறவில்லை. இந்த குறளுக்கு நேரிய பொருள், அறிவியல் கூறிய பொருளை எழுதியுள்ளேன்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
வள்ளுவர் மறை
— வைரமுத்து (@Vairamuthu) July 4, 2025
வைரமுத்து உரை
எப்படி இருக்கும்?
இதோ...
ஒரு பதச்சோறு#திருக்குறள் | #திருவள்ளுவர்#வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை pic.twitter.com/tsMySwGEVH
இந்த குறளில் 'கவரி மா' என்பதுதான் பொருளே தவிர, கவரி மான் என்பது அல்ல. சொல்லாட்சி, கவரி மா என்றுதான் இருக்கிறது. மா என்றால் விலங்கு. உடலில் கற்றை முடியை கவரியாக கொண்டு குளிரை தாங்கிக்கொண்டிருக்கும் பனி நாட்டு விலங்கு. அந்த கற்றை முறை முழுவதும் விழுந்துவிட்டால் குளிர் தாங்காமல் அந்த விலங்கு இறந்துவிடும்.
அதுபோல மானமுள்ள உயர்ந்த சான்றோர், தங்கள் மானத்திற்கு இழுக்கு நேர்ந்துவிடின் இறந்துவிடுவர் என்று எழுதியிருக்கிறேன். அறிவுலகம் இதை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications