"டீச்சர்.. என்னை லவ் பண்ண போறீங்களா இல்லையா".. நடுரோட்டில் பெண்ணை சரமாரி தாக்கிய இளைஞர்
பள்ளி ஆசிரியைக்கு லவ் டார்ச்சர் தந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
சென்னை: "டீச்சர்.. என்னை லவ் பண்ண போறீங்களா இல்லையா.." என்று தன் காதலை ஏற்க மறுத்த ஆசிரியை ஒருவரை, நடுரோட்டிலேயே இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் இளைஞர்.
பல்லாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக இருக்கிறார். இவருக்கு வயசு 24 ஆகிறது. இவரை அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற 29 வயது நபர் காதலித்துள்ளார்.
ஒன் சைட் லவ்தான்.. ஒருநாள் டீச்சரிடம் தன் காதலை சொல்லினார் வெங்கட்ராமன். ஆனால் டீச்சர் அதை ஏற்கவில்லை. இதனால் தினமும் ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போதும், லவ்வை ஏற்று கொள்ளும்படி டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
அப்படித்தான் சம்பவத்தன்றும் இப்போதும் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு போவதற்காக பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் டீச்சர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கட்ராமன், ''என் லவ்வுக்கு பதில் என்ன.. ஏத்துக்க போறியா இல்லையா.." என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
அப்போதும் டீச்சர் மறுக்கவும், வெங்கட்ராமனுக்கு ஆத்திரம் அதிகமாகி நடுரோட்டிலேயே அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். வலி பொறுக்க முடியாத டீச்சர் அங்கிருந்து தப்பி அலறி கொண்டே ஓடினார்.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசார் வெங்கட்ராமனை கைது செய்தனர். தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழலில் தூக்கி வைத்தனர்.
கைது செய்தபிறகுதான், ஏற்கனவே பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்தான் இந்த வெங்கட்ராமன் என்பது போலீசுக்கு தெரியவந்தது. இப்போது டீச்சர் மேட்டரில் வசமாக போலீசாரிடம் சிக்கி உள்ளார்.