சக பெண் அதிகாரி பற்றி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த எஸ்.பி.. மெமோ அனுப்பிய டிஜிபி! பரபரப்பு!
சென்னை: சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமாருக்கு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மெமோ அனுப்பியுள்ளார். சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா குறித்து வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார் டிஜிபி.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் "பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை" என்ற தலைப்புடன் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெறவேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வுபெற்ற டிஜிபியிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியை பெற முயற்சி செய்தார்" என அதிர்ச்சி தகவல்களுடன் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

இந்த ஸ்டேட்டஸ் வைக்கப்பட்ட மூன்று நிமிடங்களிலேயே அகற்றப்பட்டது. எனினும், சேலம் எஸ்.பி தனது வாட்ஸ் அப்பில், சக அதிகாரி குறித்த தகவல்களுடன் ஸ்டேட்டஸ் வைத்தது காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மெமோ அனுப்பியுள்ளார். சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யாவுக்கு எதிராக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தது குறித்து விளக்கம் அளிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications