"வலிக்காதுங்க".. அந்தரங்கத்தில் டாட்டூ போடும் பெண்களை ஆபாச வீடியோ யூடியூபில் ரிலீஸ் செய்யும் ராஜேஷ்!
சென்னை: சென்னை முகப்பேரில் அந்தரங்கத்தில் டாட்டூ போடும் போது பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது யூடியூப் சேனலில் போட்டு காசு சம்பாதித்து வரும் அந்த ஸ்டுடியோ உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அந்த காலத்தில் பச்சைகுத்தும் நடைமுறை இருந்து வந்தது. இதில் தங்களுக்கு பிடித்த நடிகர், தெய்வம் உள்ளிட்டோரின் உருவத்தை வரைந்து கொள்வார்கள். இல்லாவிட்டால் சிறிய சிறிய டிசைன்கள், தங்களது வாழ்க்கை துணையின் பெயர்கள், காதலன், காதலியின் பெயர்களை பச்சைக் குத்திக் கொள்வார்கள்.
ஆனால் இது நவீன யுகம் என்பதால் டாட்டூ போடும் நடைமுறை வந்துள்ளது. மிஷின் மூலம் ஏராளமான டிசைன்களில் நிரந்தர மற்றும் தற்காலிக டாட்டூக்கள் போடப்படுகின்றன.
டாட்டூ போட்ட இடத்தை க்யூட்டாக காட்டிய ரோஜா.. பார்த்து பரவசமான ரசிகர்கள்!
அந்தரங்கம்
பெண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ போடும் கலாச்சாரம் பல்கி பெருகி வருகிறது. சென்னை முகப்பேரில் டாட்டூ ஸ்டுடியோ வைத்துள்ளவர் ராஜேஷ். இவர் போடும் டாட்டூக்களை யூடியூபில் பதிவு செய்த நிலையில் நிறைய வியூஸ் வந்தது. மேலும் வலிக்காமல் டாட்டூ போடுவதில் தேர்ந்தவர். இதனால் மேலும் காசு பார்க்க விரும்பிய ராஜேஷ், அந்தரங்கத்தில் டாட்டூ போடும் பெண்களை வீடியோ எடுத்துள்ளார்.
காசு
அதை அப்படியே யூடியூப் சேனலில் போட்டதால் நிறைய காசு பார்த்துள்ளார். யூடியூபர் மதனை போல் டாட்டூ போட வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்த ஜோக்குகளை கூறுவது உள்ளிட்டவற்றையும் வீடியோவாக எடுத்து யூடியூபில் போட்டுள்ளார் ராஜேஷ்.
கேப்ஷன்
இந்த வீடியோக்களுக்கு அவர் தரும் கேப்ஷன்களும் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாகவே இருந்துள்ளன. மேலும் எடிட்டிங் என்ற பெயரில் அந்த வீடியோக்களுக்கு இடையே இவர் போடும் கமென்ட்டுகளும் கேட்க முடியாத நிலையில் உள்ளதாக பலர் புகார் அளித்துள்ளனர்.
சம்மதம்
இந்த வீடியோக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பெண்களின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட போதிலும் சமூக வலைதள பக்கமான யூடியூபில் அவற்றை பதிவு செய்வது என்பது தவறான செயலாகும். யூடியூபர் மதனை விட மோசமான செயல்களை செய்து வரும் ராஜேஷை கைது செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.