"கொன்னுடுவேன் உன்னை.." சென்னையில் 22 வயது பெண்ணிடம் அத்துமீறிய ரேபிடோ டிரைவர்.. நள்ளிரவில் பயங்கரம்
சென்னை: தலைநகர் சென்னையில் பைக் டாக்சியில் பயணித்த பெண் ஒருவரிடம் டிரைவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இப்போது பைக் டாக்சி பிரபலமடைய ஆரம்பித்துள்ளது. கார், ஆட்டோ என்றால் விலை அதிகம் டிராபிக்கிலும் மாட்டிவிடுவோம். ஆனால் பைக் என்றால் டிராபிக்கிலும் சென்றுவிடலாம். மேலும், விலையும் குறைவாகவே இருக்கும்.

இதனால் லக்கேஜ் இல்லாமல் தனியாகப் பயணிக்கும் பலரும் பைக் டாக்ஸியை தான் விரும்பி பயன்படுத்துகிறார்கள். முன்பு ஆண்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தினாலும் இப்போது இதைப் பெண்கள் பயன்படுத்துவதும் கணிசமாக அதிகரித்துள்ளது.
பைக் டாக்சி: பெரும்பாலான நேரங்களில் பைக் டாக்சி பயணங்களில் பெண்கள் எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்வதில்லை. இருப்பினும் சில நேரங்களில் பைக் டாக்சி டிரைவர்கள் பயணிக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் ஷாக் சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் வசிக்கும் 22 வயது பெண் ஒருவர் கடந்த 19ஆம் தேதி தனது மொபைல் மூலம் ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். கிண்டியில் இருந்த அந்த பெண் கொட்டிவாக்கம் வரை செல்ல பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார். கொட்டிவாக்கம் செல்லும் வரை எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணை இறக்கிவிட்ட பிறகு ஓட்டுநரின் செயல்பாடுகள் மாறியுள்ளது.
அத்துமீறிய டிரைவர்: பைக்கில் இருந்து இறக்கிவிட்ட பிறகு அந்த நபர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும், அவரை விடாமல் பின்தொடர்ந்த அந்த ஓட்டுநர், பெண்ணுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுக் கிளம்பி இருக்கிறார்.
துணிச்சலாக அந்த பெண் இந்தச் சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். போலீஸ் விசாரணையில் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது நடனசபாபதி என்பதும் அவர் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
தட்டி தூக்கிய போலீஸ்: இதையடுத்து உடனடியாக போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். மேலும், மொபைல் மற்றும் அவரது டூவீலர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 6 மாதமாக நடனசபாபதி ரேபிடோ பைக் டாக்சி ஓட்டி வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications