ரூ 20 லட்சம் வாடகை பாக்கி! யுவன் சங்கர் ராஜாவை விசாரிக்கிறதா நுங்கம்பாக்கம் போலீஸ்!
சென்னை: வாடகை பாக்கி வைத்துள்ளதாக வீட்டு உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரணை நடத்த காவல் துறை முடிவு செய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் யுவன் குடியிருந்த போது ரூ 20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாக புகார் எழுந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் ஒரு வீட்டில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குடியிருந்தார். இந்த வீடு ஃபஸீலத்துல் ஜமீலா என்பவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் ஜமீலா காவல் துறையிடம் ஒரு புகாரை அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனது வீட்டில் குடியிருந்த யுவன் சங்கர் ராஜா ரூ 20 லட்சம் வாடகையை பாக்கி வைத்துள்ளதாகவும் தன்னிடம் எந்த தகவலையும் சொல்லாமல் வீட்டை யுவன் காலி செய்துவிட்டுச் சென்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பல ஆண்டுகளாக பிரபல இசையமைப்பாளராக உள்ள தன்னை பற்றி அவதூறாக தொலைகாட்சி சேனல்களில் ஜமீலா பேட்டி அளித்துள்ளார்.
இது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தனக்கு ரூ 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீட்டின் மாத வாடகை ரூ 1.20 லட்சம் என்றும் முன்பணம் ரூ 12 லட்சம் என ஒப்பந்தம் போடப்பட்டதாம்.
அண்மையில் இந்த வீட்டின் மாத வாடகை ரூ 1.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டதாம். இதையடுத்து 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ரூ 18 லட்சம் வாடகை தராமல் யுவன் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து 12 லட்சத்தை காசோலையாக யுவன் அனுப்பினாராம். அதன் பின்னர் ஓராண்டு வீட்டில் இருந்ததற்கான வாடகை பணத்தை தரவில்லையாம்.
இவர் வீட்டை காலி செய்த விஷயம் அருகில் இருந்தவர்கள் சொல்லியே உரிமையாளர் தரப்புக்கு தெரியவந்ததாம். 20 லட்சம் வாடகை கேட்டு போனில் தொடர்பு கொண்டாலும் யுவன் சரிவர பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் யுவன் தரப்பு, ஜமீலாவுக்கு வாடகை கொடுக்காதது தெரியவந்துள்ளது. இதையடுத்து யுவன் சங்கர் ராஜாவிடம் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications