ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பா.. என்கவுண்டர் ஏன்? காவல்துறை அதிகாரி பரபர பேட்டி
சென்னை: சென்னையில் இன்று அதிகாலை ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்படார். இது குறித்து காவல் தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தற்போது விளக்கம் அளித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் சம்பந்தம் இருப்பதாக எங்களது விசாரணையில் தெரியவரவில்லை என்று தெரிவித்தார்.
ரவுடி சீசிங் ராஜா இன்று காலை சென்னை நீலாங்கரை அருகே என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்ததாக சொல்லப்பட்ட சீசிங் ராஜா என்கவுண்டரில் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடைபெற்றது ஏன்? என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரி சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அடுத்து பேட்டி வருமாறு:-

ஆந்திரவின் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை பகுதியில் சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வேளச்சேரி போலீசிடம் இரவு ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரித்துவிட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய கேட்ட போது, நான் கூட்டிட்டு போய் காட்டுகிறேன் என சீசிங் ராஜா சொல்லியிருக்கிறார். முதலில் இரண்டு இடம் காட்டினார்.
அந்த இடத்தில் இல்லை. மூன்றாவது ஒரு இடத்தை காட்டும் போது ஒரு நாட்டுத்துப்பாக்கி அந்த இடத்தில் இருக்கிறது. அதை எடுத்துகொடுப்பது போல செய்கை செய்துவிட்டு இரண்டு ரவுண்டு சுட்டார். அவருடன் சென்றிருந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களில் ஒருவரை பார்த்து சுடுகிறார். அதிர்ஷ்டவசமாக குண்டுகள் இரண்டுமே இன்ஸ்பெக்டர் மீது படவில்லை. வண்டியின் மீதுதான் பட்டுள்ளது.
இதனால் இன்ஸ்பெக்டர் தப்பித்து ஓடுகிறார். இந்தபக்கம் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக வேறு வழியில்லாமல் இரண்டு ரவுண்டு சுடுகிறார். இதில் காயம் அடைந்த சீசிங் ராஜா மயங்கி விழுகிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.. ஆனால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் உள்ளது.
மூன்று மாதத்திற்கு முன்பாக தேடப்படும் குற்றவாளியாக மாஜிஸ்திரேட்டு அறிவித்தார். இவர் கோர்ட்டில் ஆஜரகாவில்லை. 10 வாரண்ட் பெண்டிங் உள்ளது. தலைமறைவாகவே இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்க் வழக்கிற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் தேடியது வேளச்சேரி கேசில்தான். அதிலே கைது செய்யும் போதுதான் இந்த மாதிரி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications